இந்தியா வந்த ரஷ்ய பெண்ணுக்கு பெட்ரோல் பங்கில் நேர்ந்த சம்பவம்.., மன்னிப்பு கேட்க வைத்த நண்பர்
இந்தியா வந்த ரஷ்ய பெண்ணிடம் பெட்ரோல் பங்கில் ஒருவர் தவறான முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் பங்கில் ரஷ்ய பெண்
இந்தியாவுக்கு ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுற்றுலா வந்துள்ளார். அவர், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருக்கும் பெட்ரோல் பங்கிற்கு டெல்லியைச் சேர்ந்த இளைஞருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அங்கு, பெட்ரோல் பங்க் ஊழியர் ஒருவர் ரஷ்ய பெண்ணிடம் தவறான முறையில் நடந்து கொண்டுள்ளார். அதாவது, மூன்று முறை தகாத முறையில் அந்த பெண்ணை ஊழியர் தொட்டுள்ளார். உடனே, பெண்ணுடன் வந்த இளைஞர் ஊழியரிடம் சண்டை போட்டுள்ளார்.
அப்போது வாக்குவாதம் முற்றியதால், நான் வேண்டுமென்று தொடவில்லை என ஊழியர் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பொலிஸில் புகார் அளிப்பதாக ரஷ்ய பெண் கூறுகிறார்.
Harrasment kalesh (Context in the Video) pic.twitter.com/hvI0qnRsfh
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 18, 2023
மன்னிப்பு கேட்ட ஊழியர்
இதன் பின்னர், தகவலிருந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அந்த ஊழியர் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இதில், பாதிக்கப்பட்ட பெண் விக்டோரியா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. டெல்லியைச் சேர்ந்த இளைஞர் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் விக்டோரியா ஜெய்ப்பூருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |