பயணத் தடை விதிக்கப்பட்ட ரஷ்யர்கள் தங்கள் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க அரசு ஆணை
புடின் நிர்வாகத்தால் வெளிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள ரஷ்யர்கள், அறிவிக்கப்பட்ட ஐந்து நாட்களுக்குள் தங்கள் கடவுச்சீட்டுகளை ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
பயணத் தடை விதிக்கலாம்
இது தொடர்பான அரசு ஆணை திங்கள்கிழமை அமலுக்கு வரும் என்றே கூறப்படுகிறது. ரஷ்ய சட்டத்தின் அடிப்படையில், பெடரல் பாதுகாப்பு சேவையின் ஊழியர்கள், கட்டாய சேவையில் ஈடுபடுத்தப்பட்டவர்கள், குற்றவாளிகள், நாட்டின் ரகசியங்களுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்டவர்கள் மீது உரிய அதிகாரிகள் பயணத் தடை விதிக்கலாம்.
@getty
இந்த நிலையில், தற்போது பறிமுதல் செய்யப்படும் கடவுச்சீட்டுகளை உள்விவகார அமைச்சகம் அல்லது வெளிவிவகார அமைச்சகம் பாதுகாக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
அரசு நிறுவன நிர்வாகிகள்
மேலும், பயணத் தடை நீக்கப்பட்ட பிறகு, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தவுடன் கடவுச்சீட்டைத் திரும்பப் பெறலாம் என்றும் அரசு ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
@ap
கடந்த மார்ச் மாதம் வெளியான தகவலில், வெளிநாட்டுப் பயணத்தைத் தடுப்பதற்காக மூத்த அதிகாரிகள் மற்றும் அரசு நிறுவன நிர்வாகிகளின் கடவுச்சீட்டுகளை ரஷ்யாவின் பாதுகாப்புப் பிரிவினர் பறிமுதல் செய்துள்ளனர் என பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |