ரஷ்யாவுடன் மோதும் நோட்டோ...அணுஆயுத போராக மாறும் அபாயம்: ரஷ்யா எச்சரிக்கை!
- நோட்டோ ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுடன் இணைந்து பினாமி போரில் ஈடுபட்டு வருகிறது.
- மேற்கு நாடுகளின் செயல்களால் இந்த மோதல் அணுஆயுத சண்டையாக மாறும் அபாயம் இருப்பதாக செர்ஜி லாவ்ரோவ் எச்சரிக்கை.
- ரஷ்யாவின் பயமுறுத்தல் பலவீனத்தின் அறிகுறி, உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் கருத்து.
நோட்டோ ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுடன் இணைந்து மறைமுக போரில் ஈடுபட்டு வருவதால் இந்த போர் அணுஆயுத மோதலாக மாறுவதற்கான உண்மையான வாய்ப்பு இருப்பதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் எச்சரித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா போர் முன்று மாதங்களை தொட்டு இருக்கும் நிலையில், இதுவரை சிறிய ஆயுதங்கள் மற்றும் தொட்டி எதிர்ப்பு ஏவுகணைகள் போன்ற தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்கி வந்த மேற்கு நாடுகள், தற்போது ரஷ்யாவின் ராணுவ தாக்குதலை எதிர்கொள்ளவதற்காக டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், விமானம் மற்றும் நீண்ட தூர பீரங்கி போன்ற கனமான ஆயுதங்களை வழங்க தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நேற்று ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், நோட்டோ தற்போது உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவிற்கு எதிராகவும் பினாமி போரில் ஈடுபட்டு வருவதால் இந்த மோதல் அணுஆயுத சண்டையாக மாறுவதற்கான மிக தீவிரமான ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.
நோட்டோ மற்றும் அதன் கூட்டாளிகளும் சர்வதேச அரங்கில் ரஷ்யாவை கொடுமைப்படுத்த முயற்சிப்பதாக தெரிவித்த செர்ஜி லாவ்ரோவ், மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதன் முலம் முன்றாம் உலகப் போருக்கான ஆபத்தை அதிகரித்து இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் மேற்கு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் அனுப்புவது என்பது ரஷ்யாவால் முறையான இலக்காக கருதப்படும் என மீண்டும் ஒருமுறை எச்சரித்தார்.
கூடுதல் செய்திகளுக்கு: ஒரேநாளில் இரவில்...ரஷ்யா நடத்திய பயங்கர தாக்குதல்: 500 ராணுவ வீரர்கள் பலி!
அப்போது அணுஆயுத போரின் சாத்தியம் குறித்து கேட்டதற்கு, ஆபத்தை செயற்கையாக உயர்த்த நான் விரும்பவில்லை ஆனால் மேற்கத்திய நாடுகளின் செயல்பாடுகளால் இந்த நிலைமை தீவிரமடைந்துள்ளது என்பது உண்மையானது, அதை குறைத்து மதிப்பிட முடியாது என செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய அமைச்சரின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள உக்ரைன் வெளியுறவு துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ரஷ்யாவின் பயமுறுத்தலை பலவீனத்தின் அறிகுறியாகக் கருதுவதாகக் தெரிவித்தார்.