விமானத்தில் அநாகரீகமாக நடந்தால் ரூ.60,000 அபராதம்! ரியானேர் புதிய விதி
விமானத்தில் அநாகரீகமாக நடந்தால் ரூ.60,000 அபராதம் விதிக்கப்படும் என்று ரியானேர் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
விமானங்களில் அதிகரிக்கும் இடையூறுகள்
விமானப் பயணங்களின் போது சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. இதனால் சில சமயங்களில் விமானங்கள் அவசரமாகத் தரையிறக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட பயணிகள் கைது செய்யப்படுவதும்கூட நடக்கிறது.
இந்த அநாகரீகமான நடவடிக்கைகளுக்கு, விமானங்களில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
எனவே, விமான நிலையங்களிலும் விமானங்களிலும் மது அருந்துவதற்கான கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.
ரூ.60,000 அபராதம்
இந்த அதிகரித்து வரும் சிக்கலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஐரோப்பாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான ரியானேர் ஏர்லைன்ஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இனிமேல், மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் நடந்து கொள்ளும் பயணிகளுக்கு சுமார் ₹60,000 அபராதம் விதிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையானது இது போன்ற விரும்பத்தகாத சம்பவங்களைக் குறைத்து, அனைத்து பயணிகளுக்கும் பாதுகாப்பான மற்றும் இனிமையான பயண அனுபவத்தை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |