தென்கொரிய சுரங்கப்பாதையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
தென் கொரியாவில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் 5 பேர் வரை உயிரிழந்துள்ளனர் மற்றும் 37 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து
தென் கொரியாவின் தலைநகருக்கு தெற்கே குவாச்சியோன் நகரில் உள்ள விரைவு சுரங்கப்பாதை நெடுஞ்சாலையில் வியாழன் அன்று உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.49 மணிக்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
முதலில் இந்த தீ விபத்து, சுரங்கப்பாதையில் சென்ற பேருந்தும் குப்பை லொறியும் மோதியதால் ஏற்பட்டதாக கருதப்படுகிறது, அத்துடன் லொறியில் இருந்து தீ வேகமாக சுரங்கப்பாதை முழுவதும் பரவியதாக கூறப்படுகிறது.
At least 6 people reported to have died in expressway tunnel fire in Gwacheon, South Korea.
— Raphael Rashid (@koryodynasty) December 29, 2022
Initial findings showed the fire started after a bus and a truck collided. It quickly spread to the tunnel, causing massive clouds of smoke.pic.twitter.com/Ir1ydXawEz
இந்நிலையில் இந்த தீ விபத்தில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 37 பேர் காயமடைந்தனர் என்ற தகவல் தெரியவந்துள்ளது.
விரைந்த அவசர சேவை
விபத்திற்கான காரணம் இன்னும் முழுமையாக உறுதி செய்யப்படாத நிலையில், மேற்கு துறைமுக நகரமான இன்சியோனை சியோங்நாம் நகரத்துடன் இணைக்கும் இரண்டாவது கியோங்கின் விரைவுச் சாலைக்கு அவசரகால தீயணைப்பு வீரர்கள் அனுப்பப்பட்டனர்.
மேலும் சுமார் 50 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், தீயை கட்டுக்குள் கொண்டு வர தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(YONHAP/EPA)
தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல், தீ விபத்துக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையில் அதிவேக சுரங்கப்பாதையில் பற்றிய தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுள்ளது.
Gyeongin Expressway(EPA-EFE/YONHAP)