தென் ஆப்பிரிக்கா- இந்தியா இடையேயான முதல் டெஸ்டின் 2வது நாள் ஆட்டம் ரத்து
தென் ஆப்பிரிக்கா- இந்தியா இடையேயான முதல் டெஸ்டடின் 2வது நாள் ஆட்டம் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பவர் 26 , Centurion மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, முதல் பேட்டிங் செய்ய முடிவு செய்தார்.
முதல் நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்திருந்தது.
மயங்க் அகர்வால் (60), புஜாரா (0), கோலி (35) ரன்களில் ஆட்டமிழந்தனர். கே.எல்.ராகுல் (122), ரகானே (40) ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில், இன்று மழை காரணமாக 2வது நாள் ஆட்டம் தொடங்குவதால் தாமதம் ஏற்பட்டது.
தொடர்ந்து மழை பொழிந்து மைதானத்தில் தண்ணீர் தேங்கியதால், ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் 2வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக நடுவர்கள் அறிவித்தனர்.
Unfortunately, due to the large volume of rain today at Centurion, play has been called off for the day. #SAvIND pic.twitter.com/NQ5Jbc8MlJ
— BCCI (@BCCI) December 27, 2021
மழை காரணமாக தென் ஆப்பிரிக்கா-இந்தியா இடையேயான முதல் டெஸ்டடின் 2வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.