ஜோதி வடிவமாக தோன்றவுள்ள தர்மசாஸ்தா; திருவாபரணங்களுக்கு காவலாக வந்த கருடன்
நாளை பந்தளத்தில் உள்ள சபரிமலை ஐயனுக்கு மகர விளக்கு பூஜை நாளை நடைபெறவுள்ள நிலையில், இன்று திருவாபரணங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டுள்ளது.
அந்த ஊர்வலத்தின் போது சபரிமலை ஐயனின் திருவாபரங்களுக்கு பாதுகாப்பாக கருடன் வந்துள்ளார்.
காவலாக வந்த கருடன்
சபரிமலையில் பிரம்மச்சாரியாக தவக்கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் சுவாமி ஐயப்பன்.
இவரை காண மண்டலபூஜை, மகர விளக்கு பூஜை நாட்களில் பல லட்சக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள்.
ஐயனுக்கு அவரது வளர்ப்பு தந்தையான பந்தள மன்னன் அன்பளிப்பாக கொடுக்கப்பட்ட திருவாபரணங்கள் மகர விளக்கு பூஜை நேரத்தில் அணிவிக்கப்படும்.
இந்த திருவாபரணங்கள் 3 சந்தன பெட்டிகளில் பந்தள அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒவ்வொரு வருடமும் பொலிஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு கொண்டு வரப்படும்.
அந்தவகையில் இவ்வருடன் மதியம் 12 மணிக்கு பக்தர்களின் தரிசனத்துக்கு பின்னர் மேளதாளம் முழங்க திருவாபரண ஊர்வலம் புறப்பட்டுள்ளது.
அதன்போது கருடன் வட்டமிட்டு பாதுகாத்துள்ளது. அங்கிருந்து எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக நடைப்பயணமாக சென்று நாளை பம்பையை சென்றடையும்.
அங்கு பக்தர்களின் தரிசனத்திற்கு பின் சரண கோஷத்துடன் நீலிமலை. சரம்குத்தி, மரக்கூட்டம் வழியாக மாலை 5.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.
இதன் போது தான் விஷ்ணு பகவான், கருட வாகனத்தில் ஏறி, பந்தளத்தில் இருந்து சபரிமலைக்கு திருவாபரணத்துடன் காவலுக்கு உடன் வருவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
இதை பார்த்த ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சரண கோஷத்துடன் ஐயனை வணங்கியுள்ளனர்.
மேலும் நாளை மாலை 6 மணியளவில் சபரிமலை ஐயன் பக்தர்களுக்கு ஜோதி வடிவமாக காட்சியளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |