புறப்பட்டு 4 வாரங்கள்... இஸ்ரேலுக்கான 16,000 ஆடு, மாடுகளுடன் துறைமுகம் ஒன்றில் சிக்கியுள்ள சரக்கு கப்பல்
இஸ்ரேலுக்கு 16,000 ஆடு மற்றும் மாடுகளுடன் புறப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று, சமீபத்திய செங்கடல் தாக்குதல் காரணமாக அவுஸ்திரேலிய துறைமுகம் ஒன்றில் சிக்கியுள்ள சம்பவம் வெளியாகியுள்ளது.
அவுஸ்திரேலியா துறைமுகத்தில்
சுமார் 4 வாரங்களுக்கு முன்னர் குறித்த சரக்கு கப்பலானது இஸ்ரேலுக்கு புறப்பட்டுள்ளது. ஆனால், செங்கடல் பகுதியில் ஹவுதிகள் முன்னெடுத்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் காரணமாக கப்பல் போக்குவரத்து தடைபட்ட நிலையில், தொடர்புடைய கப்பலும் அவுஸ்திரேலியா துறைமுகத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.
Credit: File Pic
இந்த நிலையில், புறப்பட்ட இடத்திற்கே திரும்ப அவுஸ்திரேலிய அரசு கட்டாயப்படுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆப்பிரிக்காவை சுற்றி சுமார் 33 நாட்கள் பயணத்திற்கு பின்னர் இஸ்ரேல் சென்று சேர அந்த கப்பலை அனுமதிக்க வேண்டுமா என்ற கேள்வியும் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.
கால்நடைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தாலும் சில அரசியல்வாதிகள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள், தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு, கால்நடைகளை கொடூரமான முறையில் நடத்துவதாகக் கூறுகின்றனர்.
மட்டுமின்றி, உயிருடன் கால்நடைகளை ஏற்றுமதி செய்வதில்லை என்ற விதியை அவுஸ்திரேலியா அரசு செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.
செங்கடல் தாக்குதல் காரணமாக
மார்ஷல் தீவு கொடியுடன் புறப்பட்ட MV Bahijah என்ற சரக்கு கப்பல், செங்கடல் தாக்குதல் காரணமாகவே பயணத்தை ரத்து செய்துள்ளது. பெர்த் துறைமுகத்திற்கு திங்கட்கிழமை அந்த கப்பல் வந்து சேர்ந்துள்ளது.
@reuters
அப்போது பெர்த் நகரில் வெப்ப அலை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.
இதனிடையே, 16,000 கால்நடைகளின் ஆரோக்கியம் பரிசோதித்து, சில எண்ணிக்கையை விடுவித்து, எஞ்சியதை மீண்டும் ஏற்றுமதி செய்யலாமா என தொடர்புடைய இஸ்ரேலிய நிறுவனத்திடம் கலந்தாலோசிக்க இருப்பதாக அவுஸ்திரேலிய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |