பிரித்தானியாவில் மீண்டும் உச்சத்தை தொடும் கொரோனா! எச்சரிக்கும் சுகாதார செயலாளர்
பிரித்தானியாவில் இன்னும் கொரோனா பாதிப்பு முடிந்தவிட வில்லை எனவும், நாள் ஒன்றிற்கு அது 100000 பேரை தாக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் பிரித்தானியாவில் தற்போது மீண்டும் ஒரு சில பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இதனால் அதைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு தொடர்ந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
இந்நிலையில், இன்று பிரதமர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சுகாதார செயலாளரான Sajid Javid, கொரோனா தொற்று இன்னும் முடியவில்லை, இந்த பாதிப்பு நாள் ஒன்றிற்கு ஒரு லட்சம் பேர் வரை உயரக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் 49,000 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரம் இறப்பு எண்ணிக்கை, கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போதும், 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் மற்றொரு ஊரடங்கு வருமா என்ற சந்தேகம் நிலவிய போது, அதற்கு பிரதமர் அலுவலம் அதற்கான திட்டம் தற்போது வரை இல்லை என்று கூறியிருந்தது.
இதற்கிடையில் தான் இன்று Sajid Javid செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, வரவிருக்கும் குளிர்கால மாதங்கள் தான் மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கப் போகிறது. ஏனெனில், கொரோன போன்ற பருவகால வைரஸ்கள், குளிர்ந்த வானிலை காலக்கட்டதில், தாக்குவதற்கு எளிதாகிவிடும்.
இதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கொரோனா இறப்புகள் குறைவாக இருந்தாலும், தற்போது வரை நாள் ஒன்றிற்கு 100-க்கு மேல் இறக்கிறார்கள் என்பதை அறியும் போது வருத்தமாக இருப்பதாக கூறினார்.
எனவே, இன்னும் தொற்று நோய் முடியவில்லை என்பதை மக்கள் அறிய வேண்டும். எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
இந்த தொற்றுநோய் முடிந்துவிடவில்லை. நாங்கள் விழுப்புடனே இருப்போம். எதற்கு தயாராக இருக்கிறோம். வைரஸை எதிர்த்து போராடுவதற்கு பாதுகாப்புகளை வலுப்படுத்துகிறோம் என்று கூறினார்.