டுவிட்டரின் புது CEO-வாக நியமிக்கப்பட்ட இந்தியரின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
டிவிட்டரின் புது தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த பரக் அக்ராவல் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஒவாக ஜேக் டார்சி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் அவர் திடீரென அப்பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
அதனையடுத்து ட்விட்டர் நிறுவனத்தின் புதிய சிஇஓவாக பரக் அக்ராவல் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரின் ஆண்டு வருமானம் குறித்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ட்விட்டர் சிஇஓ பரக் அக்ராவலுக்கு ஆண்டுக்கு 1.40 மில்லியன் அமெரிக்க டாலர் என சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் பராக் அகர்வாலின் ஆண்டு வருமானம் ரூ.10,51,57,220 (Ten Crore Fifty One Lakh Fifty Seven Thousand Two Hundred Twenty) கோடி ஆகும்.
நவம்பர் 29 திகதியிட்ட பரக் அக்ராவலுக்கு ட்விட்டர் நிறுவனம் பணி ஆணை வழங்கியுள்ளது. அவருக்கு இனி ஆண்டுக்கு 1 மில்லியன் அமெரிக்கன் டாலர் ஊதியமாக வழங்கப்படும். அதுதவிர அவருடைய அடிப்படைச் சம்பளத்தில் இருந்து 150% ஆண்டுக்கான போனஸ் வழங்கப்படும்.
இது தவிர(RSU) வாயிலாக 12.5 மில்லியன் டாலர் கிடைக்கப் பெறுவார். இது தவிர ட்விட்டர் ஊழியர்களுக்கான சலுகைத் திட்டங்கள் அனைத்துமே இவருக்குப் பொருந்தும். மேலும் செயல்திறனுக்கு ஏற்ப அலவன்ஸ்களும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.