சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து 3 இலங்கை வீரர்களுக்கு தடை! இது சரியா? தைரியமாக தனது கருத்தை வெளிப்படுத்திய ஜாம்பவான் ஜெயசூர்யா
3 இலங்கை வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பில் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பயோ பபுள் விதிகளை மீறி மெண்டிஸ், திக்வெல்ல மற்றும் குணதிலக்க ஆகியோருக்கு அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஒரு வருடத்திற்கும், உள்நாட்டு கிரிக்கெட்டிலிருந்து ஆறு மாதங்களுக்கும் இலங்கை கிரிக்கெட் வாரியம் தடை விதித்தது.
இந்நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது பயோ பபுள் விதிகளை மீறிய மூன்று இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டியது அவசியம் என்று இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.
கிரிக்கெட் வீரர்கள் குசல் மெண்டிஸ், திக்வெல்ல மற்றும் குணதிலக்க ஆகியோர் இங்கிலாந்தின் டர்ஹாமில் செய்த செயல்களுக்காக கண்டிப்பாக கண்டிக்கப்பட வேண்டும் என்றார்.
இருப்பினும், இந்த தண்டனை மிகக் கடுமையானது என்று மூவரும் உணர்ந்தால், அவர்கள் முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.