பிரித்தானியாவின் ஆங்கிலிக்க திருச்சபையில் முதல்முறையாக பெண் பேராயர் நியமனம்
பிரித்தானியாவின் ஆங்கிலிக்க திருச்சபையில் முதல்முறையாக பெண் பேராயராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் ஆங்கிலிக்க திருச்சபையில் 1,400 ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே தலைமை ஆயராக இருந்த வரலாற்றை முறியடித்து, சாரா முல்லல்லி (Sarah Mullally) கேன்டர்பரியின் முதல் பெண் பேராயராக (Archbishop of Canterbury) நியமிக்கப்பட்டுள்ளார்.
இது உலகளாவிய 85 மில்லியன் ஆங்கிலிக்க கிறிஸ்தவர்களின் ஆன்மீக தலைவராகவும் அவரை உயர்த்துகிறது.
முன்னதாக லண்டன் ஆயராக இருந்த சாரா முல்லல்லி, 2018 முதல் பல சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட்டவர். பாலின சமத்துவம், ஒரே பாலின திருமணங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கும் உரிமை உள்ளிட்ட பல லிபரல் கோட்பாடுகளை ஆதரித்தவர்.
ஆனால், ஆப்பிரிக்காவில் உள்ள சில கடுமையான ஆங்கிலிக்க குழுக்கள், பெண்கள் ஆயராக இருப்பதை எதிர்த்து அவரது நியமனத்தை விமர்சித்துள்ளன.
63 வயதான சாரா முல்லல்லி, முன்னாள் நர்சிங் அதிகாரியாகவும், 2000-களில் இங்கிலாந்தின் Chief Nursing Officer-ஆக பணியாற்றியுள்ளார். 2002-ஆம் ஆண்டு பாதிரியாராக ஆணையிடப்பட்டு, 2015-ல் ஆயராக உயர்ந்தார்.
2026 மார்ச் மாதத்தில் Canterbury Cathedral-ல் நடைபெறும் விழாவில் அவர் பதவியேற்கவுள்ளார். இது ஆங்கிலிக்க திருச்சபையின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Sarah Mullally First Female Archbishop, First Female Archbishop UK, Church of England