சசிகலாவுடன் சிறையில் இருந்த அவர் உறவினரான இளவரசியின் சம்மந்தி அதிரடி கைது! வெளியான காரணம்
சசிகலாவின் உறவினரான இளவரசியின் சம்மந்தி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
சசிகலாவின் உறவினரான இளவரசியின் மகன் விவேக்.
இவரது மாமனார் பாஸ்கரன் (55). சென்னை அண்ணா நகர் மேற்கில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவர் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. குறிப்பாக செம் மரங்களை வெட்டி வெளிநாடுகளுக்கு கடத்துவதாக ஆந்திர மாநில பொலிசார் இவர் மீது பல வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
செம்மரக் கட்டைகளை கடத்தி வந்ததாக தமிழக பொலிசாரும் இவர் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதேபோல் வருவாய் புலனாய்வு பிரிவினரும் பாஸ்கரன் மீது வழக்குகள் பதிவு செய்துள்ளனர்.
வெளிநாடுகளுக்கு செம்மரக் கட்டைகள் கடத்தியது தொடர் பாக 2 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்காக பாஸ்கரனை கைது செய்ய ஆந்திர பொலிசார் முடிவு செய்தனர்.
அதைத் தொடர்ந்து 2 கார்களில் சென்னை வந்த அவர்கள் அண்ணா நகரில் உள்ள பாஸ்கரனின் வீட்டுக்கு நேற்று அதிகாலையில் சென்றனர்.
அவரை கைது செய்வதற் கான வாரண்ட்டை காட்டி, பின்னர் பாஸ்கரனை கைது செய்தனர்.