வெளிநாடொன்றில் கை துண்டிக்கப்பட்ட இந்தியர்: யாரும் கண்டுகொள்ளாததால் சாலையோரம் உயிரிழந்த பரிதாபம்
வெளிநாடொன்றில் பணியிலிருக்கும்போது கை துண்டிக்கப்பட்ட இந்தியர் ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்காமல் சாலையோரமாக போட்டுவிட்டதால், கவனிக்க யாருமில்லாமல் பரிதாபமாக பலியாகியுள்ளார் அவர்.
பணியின்போது கை துண்டிக்கப்பட்ட இந்தியர்
இத்தாலியிலுள்ள Latina என்னுமிடத்திலுள்ள பண்ணை ஒன்றில் வேலை செய்துகொண்டிருந்த சத்னாம் சிங் என்னும் இந்தியரின் கை எந்திரம் ஒன்றில் சிக்கி துண்டிக்கப்பட்டுள்ளது.
அவருக்கு உதவுவதற்கு பதிலாக, அந்தப் பண்ணையுடன் தொடர்புடையவர்கள், சிங்கை அவரது வீட்டருகே கொண்டு போட்டுவிட்டுச் சென்றுவிட்டதாக உள்ளூர் தொழிலாளர் சங்கம் ஒன்று கூறியுள்ளது. யாரும் கவனிக்காததால் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார் அவர்.
இந்த துயர சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய தொழிலாளர் துறை அமைச்சரான Marina Calderone, ஆபத்தான நிலையில் சாலையோரம் கைவிடப்பட்ட சத்னாம் சிங் உயிரிழந்துவிட்டார் என்றும், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுவருவதாகவும், சிங்கின் உயிரிழப்புக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.
இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தி
அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ள இந்திய தூதரகம், சிங்குக்கு ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான முடிவு குறித்து தெரியவந்துள்ளதாகவும், அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு, அவர்களுக்கு தேவையான உதவிகள் வழங்கவுவதற்கான முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |