அடங்காத சவுதி அரேபியா... உயிர் பயத்தில் 54 பேர் தவிப்பு: பீதியில் அவர்கள் குடும்பத்தினர்

Death Penalty Saudi Arabia Crime
By Arbin Nov 26, 2022 10:05 AM GMT
Report

சவுதி அரேபியாவில் அடுத்த சில நாட்களில் மேலும் பல கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற பகீர் தகவல் வெளியாகியுள்ளது.

மரண தண்டனை அதிகரிப்பு

குறித்த நபர்களின் உறவினர்கள் அந்த தகவலுக்காக பயத்துடன் காத்துக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கொலைக் குற்றவாளிகள், போதைமருந்து கடத்தல் தொடர்பில் தண்டிக்கப்பட்டவர்கள் மற்றும் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடையவர்கள் என மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை சவுதி அரேபியாவில் சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

அடங்காத சவுதி அரேபியா... உயிர் பயத்தில் 54 பேர் தவிப்பு: பீதியில் அவர்கள் குடும்பத்தினர் | Saudi Arabia Possible Execution Fear Mounts

@getty

இந்த நிலையில், அக்டோபர் தொடக்கத்தில் இருந்தே 24 பேர்களுக்கு மரண தண்டனையை சவுதி நிர்வாகம் நிறைவேற்றியுள்ளது. இதில் கடந்த 2 வாரத்தில் மட்டும் 18 பேர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

தனடனை விதிக்கப்பட்டவர்களில் 16 பேர்கள் போதைமருந்து கடத்தல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டவர்கள். இதனிடையே, போதைமருந்து கடத்தல் வழக்கில் மரண தண்டனை விதிப்பதற்கு ஐக்கிய நாடுகள் மன்றம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததுடன், கண்டனமும் தெரிவித்திருந்தது.

ஐக்கிய நாடுகள் மன்றம் கடும் அதிருப்தி

பொதுவாக, கொலை வழக்குகளில் மரண தண்டனையை எதிர்நோக்கும் நபர்களின் குடும்பங்களுக்கு சவுதி அதிகாரிகள் முன்கூட்டியே தகவல் அனுப்புகிறார்கள். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மரணதண்டனை நிறைவேற்றப்படும் வரை அறிவிக்கப்படுவதில்லை.

அடங்காத சவுதி அரேபியா... உயிர் பயத்தில் 54 பேர் தவிப்பு: பீதியில் அவர்கள் குடும்பத்தினர் | Saudi Arabia Possible Execution Fear Mounts

@Patrick Feller

இதனால், மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ள கைதிகளின் உறவினர்கள், அரசு ஊடக அறிக்கைகள் மூலம் மரணதண்டனை பற்றி அறிந்து கொள்ளும் நிலை உள்ளது. மட்டுமின்றி, இறுதி நிமிடங்களில் தங்களின் உறவினரின் உடனிருக்கும் அனுமதியும் கிடைப்பதில்லை என்கிறார்கள்.

சவுதி அரேபியாவில் பெரும்பாலும் தலையை வெட்டி மரண தனடனை நிறைவேற்றப்படுவதால், உறவினர்களை அனுமதிப்பதில்லை. ஆண்டு பிறந்ததில் இருந்து இதுவரை 144 பேர்களுக்கு சவுதி நிர்வாகம் மரணதண்டனை நிறைவேற்றியுள்ளது.

81 பேர்களுக்கு ஒரே நாளில் மரணதண்டனை

கடந்த ஆண்டில் மொத்தம் 69 பேர்களுக்கு மட்டுமே மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், கடந்த மார்ச் மாதம் மட்டும் பயங்கரவாதம் தொடர்புடைய நபர்கள் என கூறி, 81 பேர்களுக்கு ஒரே நாளில் மரணதண்டனை நிறைவேற்றியது சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தது.

இந்த நிலையில், தற்போது 8 சிறுவர்கள் உட்பட 54 பேர்கள் மரணதண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக வெளியான தகவல் ஐரோப்பிய சவுதி மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US