இனி இவர்களுக்கு அனுமதியில்லை... சவுதியில் அமுலுக்கு வரும் புதிய தடை! வெளியான முக்கிய அறிவிப்பு
கொரோனா தடுப்பூசி போடாத குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பொதுயிடங்களுக்குள் நுழைய தடை விதிப்பதாக சவுதி அறிவித்துள்ளது.
சவுதி நகராட்சி மற்றும் கிராம விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின் படி, ஆகஸ்ட் 1ம் திகதி முதல் நாட்டில் தடுப்பூசி போடாதவர்கள் மால்கள், உணவகங்கள், வணிக மையங்கள், சில்லறை கடைகள் மற்றும் மார்க்கெட்கள் போன்ற பொது இடங்களுக்குள் நுழைய தடை விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.
உணவகங்கள், கஃபேக்கள், முடிதிருத்தும் கடைகள், அழகு நிலையங்கள், திருமணம் மற்றும் பார்ட்டி ஹால்களுக்குள் நுழைய தடுப்பூசி போட்ட ஆதாரத்தை காட்ட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான அமைச்சகத்தின் முயற்சிகளின் தொடர்ச்சியாக, பல நகராட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அல்லது நுழையும் தொழிலாளர்கள் மற்றும் பயணிகளுக்கு தடுப்பூசி போடுவது அவசியம் என்று அமைச்சகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் 9ம் திகதி முதல் அனைத்து சவுதி குடிமக்களும் வெளிநாடுகளுக்கு பயணிப்பதற்கு முன்பு இரண்டு டோஸ் தடுப்பூசி போட்கொள்ள வேண்டும் என்று இந்த வார தொடக்கத்தில் உள்துறை அமைச்சகம் அறிவித்தது நினைவுக் கூரத்தக்கது.