தரையிறங்கும்போது தீப்பிடித்த சவுதி ஏர்லைன்ஸ் விமானம்., உயிர் தப்பிய 297 பயணிகள்
பகிஸ்தானில் சவுதி ஏர்லைன்ஸ் விமானமொன்று தரையிறக்கத்தின்போது தீப்பிடித்தது.
297 பேருடன் சென்ற சவுதி ஏர்லைன்ஸ் விமானம் பாகிஸ்தானின் பெஷாவர் விமான நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) தரையிறங்கும் போது தீப்பிடித்தது.
ரியாத்தில் இருந்து பெஷாவர் வந்தடைந்த இந்த விமானத்தின் தரையிறங்கும் கருவியில் சிக்கல் ஏற்பட்டது. கருவியின் உள்ளே தீப்பிடித்ததால், டயரில் இருந்து புகை கிளம்பியது.
இதற்கிடையில், இதை கவனித்த ஏடிசி ஊழியர்கள் விமானிக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக விமானம் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டு, அவசர கதவு வழியாக பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர்.

விமானத்தில் இருந்த 276 பயணிகளும் 21 பணியாளர்களும் காயமின்றி உயிர் தப்பினர்.
தீயணைப்பு படையினர் விமானத்திற்கு வந்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த சம்பவத்தை சவுதி ஏர்லைன்ஸ் உறுதி செய்துள்ளது.
விமானத்தின் அவசர கதவு வழியாக பயணிகள் இறங்கும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Saudi Airline’s plane ✈️ got fire at Peshawar airport, safety protocols are activated. pic.twitter.com/iuxq6mmxjd
— فرحان الحق کیانی (@Farhan_Kiyani) July 11, 2024


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |