சவுதி அரேபியாவின் பிரதமரானார் இளவரசர் முகமது பின் சல்மான்: பாரம்பரிய நடைமுறையில் மாற்றம்
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் பிரதமராக நியமனம்.
அரசரின் மகன்களில் ஒருவரான இளவரசர் காலித் பின் சல்மான் புதிய பாதுகாப்பு அமைச்சராக நியமனம்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
86 வயதான செளதி அரேபியாவின் அரசர் சல்மான் பின் அப்துலாசிஸ்-இன் 37 வயது மகன் முகமது பின் சல்மான் நாட்டின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முகமது பின் சல்மான் இதற்கு முன்னதாக துணை பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் ஆகிய பொறுப்புகளை கவனித்து கொண்டிருந்த நிலையில் முகமது பின் சல்மானுக்கு இந்த பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
AP
இந்த ஆண்டு ஏற்கனவே இரண்டு முறை மருத்துவமனையில் அரசர் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், எண்ணெய் வளம் மிக்க இந்த வளைகுடா நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நடைமுறை ஆட்சியாளராக பார்க்கப்பட்டார்.
அதாவது மன்னராக அவரது தந்தை இருந்த போதிலும் அனைத்து நிர்வாக முடிவுகளையும் இளவரசரே எடுப்பதாக பார்க்கப்பட்டது.
மேலும் சவுதி அரேபியாவில் பாரம்பரியமாக அரசரே பிரதமர் பதவியை வைத்திருந்த நிலையில், இந்த பதவி தற்போது இளவரசருக்கு வழங்கப்பட்டுள்ளது.
REUTERS
இது தொடர்பாக சௌதி அரசியல் ஆய்வாளரான அலி ஷிஹாபி, முகமது பின் சல்மானின் பதவி உயர்வு அவருக்கான உண்மையான அதிகாரத்தை முறைப்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு; ரஷ்யாவில் இருந்து உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தல்
இத்துடன் அரசரின் மகன்களில் ஒருவரான இளவரசர் காலித் பின் சல்மான் புதிய பாதுகாப்பு அமைச்சராகவும், மூன்றாவது மகனான அப்துலாசிஸ் பின் சல்மான், நாட்டின் எரிசக்தி அமைச்சர் என்கிற முக்கிய பொறுப்பில் நீடிக்கிறார் என்று ஆணை தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் பிரதமரானார் இளவரசர் முகமது பின் சல்மான்: பாரம்பரிய நடைமுறையில் மாற்றம்