விவாகரத்து பெற்ற காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா - 17 ஆண்டு கால போராட்டம்
17 ஆண்டு கால சட்ட போராட்டத்திற்கு பின்னர் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விவாகரத்து பெற்றுள்ளார்.
விவாகரத்து பெற்ற காஷ்மீர் முதல்வர்
ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக இருப்பவர் உமர் அப்துல்லா. இவர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் மகன் ஆவார்.

இவருக்கு கடந்த 1994 ஆம் ஆண்டு பாயல்நாத் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
பாயல் தன்னை நியாயமற்ற முறையில் நடத்தியதாக உமர் அப்துல்லா தொடர்ந்த விவாகரத்து வழக்கை போதிய ஆதாரமில்லை எனக்கூறி குடும்ப நல நீதிமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டு நிராகரித்தது.
கடந்த 2023 ஆம் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றமும் அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், பாயலுக்கு மாதந்தோறும் பராமரிப்பு தொகையாக 1.5 லட்சம் ரூபாய், மகன்களில் ஒருவரின் கல்விச் செலவுக்காக மாதந்தோறும் 60,000 ரூபாய் வழங்கவும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஒமர் அப்துல்லா மேல் முறையீடு செய்திருந்தார். நீதிபதிகள் நரசிம்மா, அலோக் அராதே அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.
உமர் அப்துல்லா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், "அவர்கள் சுதந்திரமாக வாழவும் முடிவு செய்துள்ளனர். எனவே அரசியல் சட்டப்பிரிவு 142-ன் கீழ் அவர்களின் திருமணத்தை ரத்து செய்து விவாகரத்து வழங்கலாம் என தெரிவித்தார்.
இதனை ஏற்ற நீதிபதிகள் நீதிபதிகள், உமர் அப்துல்லா - பாயல் தம்பதிக்கு விவாகரத்து வழங்கி வழக்கை முடித்து வைத்தனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |