மனித உடலின் உள்ளுறுப்புகளை சிதறவைக்கும் பயங்கர வெடிகுண்டுகளை ரஷ்யா வெடிக்கச் செய்யும் காட்சி
கிழக்கு உக்ரைனிலும் தோல்வியை நெருங்கிக்கொண்டிருக்கும் ரஷ்யப் படைகள், தாங்கள் ஏற்கனவே ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதிகளையும் இழந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் உக்ரைன் படைகள் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்திவருகின்றன.
கிழக்கு உக்ரைனிலும் தோல்வியை நெருங்கிக்கொண்டிருக்கும் ரஷ்யப் படைகள், தாங்கள் ஏற்கனவே ஆக்கிரமித்து வைத்திருக்கும் பகுதிகளையும் இழந்துவிடக்கூடாது என்ற அச்சத்தில் உக்ரைன் படைகள் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்திவருகின்றன.
TOS-1A thermobaric என்னும் குண்டுகளை ரஷ்யப் படையினர் உக்ரைன் படைகள் மீது வீசித் தாக்கி வருகிறார்களாம்.
இந்த TOS-1A thermobaric வகை குண்டுகள், வழக்கமான குண்டுகளை விட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையாகும்.
இந்த குண்டுகள் இரண்டு கட்டங்களாக செயல்படுகின்றன. குண்டு வீசப்பட்டதும், முதலில் குண்டு வெடித்து ஒரு எரிபொருளின் ஆவி வெளியாகும். அந்த ஆவி சுற்றிலும் பரவும் நிலையில், இரண்டாவது ஒரு முறை அந்த குண்டு வெடித்து ஏற்கனவே பரவியிருக்கும் எரிபொருளின் ஆவியை தீப்பிடிக்கச் செய்யும்.
அதன் விளைவாக பயங்கர வெடிப்பு ஒன்று உருவாகி, மிக அதிக வெப்பம் கொண்ட ஒரு தீப்பந்து உருவாகும். அந்த தீப்பந்து தன்னைச் சுற்றியிருக்கும் ஆக்சிஜனை உறிஞ்ச, மிக பயங்கர வெடி அலையாக பரவும்.
அந்த தீப்பந்து, ஆயுதங்களையும் உடல்களையும் உருகச் செய்ய, அதனால் உருவாகும் அதிக அழுத்த வெடி அலை, கட்டிடங்களை அழிப்பதோடு, மனிதனுடைய உள் உறுப்புகள் வரை சிதறடித்துக் கொல்லுமாம்.
இவ்வகை பயங்கர குண்டுகள் பலவற்றை ரஷ்யப் படைகள் உக்ரைன் படையினர் மீது பிரயோகிப்பதை வெளியாகியுள்ள்ள வீடியோவில் காணலாம்.
இந்த காட்சி ரஷ்ய ட்ரோன் என்றால் படம்பிடிக்கப்பட்டதாக தோன்றும் நிலையில், சமூக ஊடகம் ஒன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.