தற்கொலை தரவுகளை விரும்பி தேடிய லண்டன் சிறுவன்: பின்னர் நடந்த நெஞ்சை உலுக்கும் சம்பவம்
லண்டனில் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட பாடசாலை சிறுவன், தற்கொலை தொடர்பான தரவுகளை சமூக ஊடகங்களில் விரும்பி தேடியுள்ளது தற்போது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தேம்ஸ் நதியில் தற்கொலை
கடந்த 2021 ஏப்ரல் மாதம் Tower Bridge-ல் இருந்து குதித்து தேம்ஸ் நதியில் தற்கொலை செய்து கொண்ட ஜாஹித் அலி என்ற சிறுவன் தொடர்பிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
@PA
ஈஸ்டர் விடுமுறைக்கு பின்னர், பாடசாலைக்கு திரும்பிய சிறுவன், தேம்ஸ் நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட நிலையில், 8 நாட்களுக்கு பின்னர் சடலம் மீட்கப்பட்டது.
தமது மகன் இப்படியான ஒரு சூழலில் இருந்துள்ளான் என்பது குறித்து எந்த அறிகுறியும் தங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் நடவடிக்கையிலும் எந்த மாறுதலும் இருந்ததில்லை, மாறாக அலைபேசியை அதிகமாக பயன்படுத்தி வந்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனிடையே, சிறுவன் ஜாஹித் அலி கைப்பட எழுதிய கடிதம் ஒன்றும், தற்கொலையை ஆதரிக்கும் ஜப்பானிய பாடல் ஒன்றின் வரிகளும் அவனது பையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தற்கொலையை ஆதரிக்கும் குழு
மேலும், தமது முடிவை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நாள் குறித்துள்ளதாகவும், டுவிட்டர் பக்கத்திலும் தற்கொலையை ஆதரிக்கும் குழுவினரையே சிறுவன் ஜாஹித் அலியும் பின்பற்றி வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
Image: Streetview
பாடசாலையில் தமக்கும் சக மாணவர்களுக்கும் என வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கியிருந்த ஜாஹித் அலி, தமது தற்கொலை குறித்து அவர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார்.
பள்ளி தலைமை ஆசிரியர்களில் ஒருவர் தெரிவிக்கையில், கல்வியில் சிறந்துவிளங்கிய ஜாஹித் அலி, கொரோனா ஊரடங்கால் தடுமாறியுள்ளதாகவும்,
இணையமூடாக கல்வி கற்பதில் சிறுவன் ஜாஹித் அலிக்கு உடன்பாடில்லை எனவும், இதனால் பள்ளிக்கு வந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தும், பெற்றோர் ஒப்புக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.