முன்பு அரசுப் பள்ளி ஆசிரியர்... குடியிருந்த வீட்டையே ரூ 110 கோடி வணிகமாக மாற்றி சாதனை
ஒரு காலத்தில் மும்பையில் அமைந்துள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிய நபர், இன்று ரூ.110 கோடி மதிப்புள்ள தொழிலை நடத்தி வருவகிறார்.
வாடகை வீடுகளுடன்
லோனாவாலாவில் உள்ள தனது குடும்ப வீட்டிலிருந்தே தொழிலதிபர் அமித் தமானி தமது பயணத்தைத் தொடங்கினார். மட்டுமின்றி, வெறும் பத்தாண்டிற்குள், அவர் அந்த வணிகத்தை மிகவும் வெற்றிகரமான முயற்சியாகவும் மாற்றியுள்ளார்.
அமெரிக்காவின் முதன்மையான பல்கலைக்கழகம் ஒன்றில் பொருளாதாரம் மற்றும் சர்வதேச ஆய்வுகளில் பட்டம் பெற்ற தமானி, மும்பையின் தாராவியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் டீச் ஃபார் இந்தியா பெல்லோஷிப்பின் கீழ் ஆசிரியராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
2012 இல் அந்த ஒப்பந்தம் முடிவுக்கு வர, 2014 வரையில் அவர் Dalberg Global Development Advisors என்ற நிறுவனத்தில் இணை ஆலோசகராகப் பணியாற்றத் தொடங்கினார்.
அங்கிருந்து விலகி, 2015ல் அவர் அங்கிதா ஷெத் மற்றும் பிரணவ் மகேஸ்வரி ஆகியோருடன் இணைந்து Vista Rooms நிறுவனத்தை (தற்போது StayVista என்று அழைக்கப்படுகிறது) இணைந்து நிறுவினார்.
ஆரம்பத்தில் சிறிய ஹொட்டல்கள் மற்றும் வாடகை வீடுகளுடன் கூட்டு சேர்ந்த இந்த நிறுவனம், பின்னர் ஆடம்பர குடியிருப்புகளில் கவனம் செலுத்தத் தொடங்கியது. தற்போது StayVista நிறுவனம் சொகுசு வில்லாக்களை வாடகைக்கு விடும் பிராண்டாக அடையாளம் காணப்படுகிறது.
வருவாயில் 30 சதவீதம்
இந்தியா முழுக்க 60 பகுதிகளில் 800க்கும் அதிகமான தெரிவு செய்யப்பட்ட ஆடம்பரக் குடியிருப்புகளை நிர்வகிக்கிறது. StayVista நிறுவனமானது ஒவ்வொரு முன்பதிவிலும் வருவாயில் 30 சதவீதம் தங்களுக்கும், மீதமுள்ள 70 சதவீதம் குடியிருப்பின் உரிமையாளருக்கும் வழங்குகிறது.
StayVista நிறுவனம் தொடங்கி வெறும் பத்தாண்டுகளில் ரூ 110 கோடி சந்தை மதிப்பை எட்டியுள்ளது. எதிர்வரும் ஆண்டுகளில் ரூ 1,000 கோடிக்கு இலக்கு வைத்துள்ள StayVista நிறுவனம் தங்களின் நிர்வாகத்தில் 2500 குடியிருப்புகள் மற்றும் வில்லாக்களை கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது.
StayVista மட்டுமின்றி, Medbikri மற்றும் Driffle போன்ற நிறுவனங்களிலும் தமானி முதலீடு செய்துள்ளார். அத்துடன் மும்பையில் Robin Hood Army என்ற தன்னார்வ அமைப்பின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் உள்ளார்.
இந்த அமைப்பானது அன்றாடம் உணவகங்களிலிருந்து உபரி உணவை வாங்கி, அதை ஏழைகளுக்கு வழங்கி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |