பள்ளிக்கட்டணம் செலுத்தாத மாணவனை சரமாரியாகத் தாக்கிய ஆசிரியர்... பின்னர் நடந்த பயங்கரம்
பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி ஆசிரியர் தாக்கியதில் மாணவர் ஒருவர் பலி.
உண்மையில் அந்த மாணவருடைய சகோதரர் கட்டணம் செலுத்தியது தெரியாமலே அந்த ஆசிரியர் அவரைத் தாக்கியிருக்கிறார்.
நேபாள நாட்டில், பள்ளிக்கட்டணம் செலுத்தாத மாணவன் ஒருவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக தாக்கியதைத் தொடர்ந்து அந்த மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்திலுள்ள Chailahi என்ற இடத்தில் அமைந்துள்ள பண்டித் பிரம்மதத் பள்ளி என்ற பள்ளியில் படித்துவந்துள்ளான் விஸ்வகர்மா (Chrijesh Vishwakarma, 13) என்ற மாணவன்.
இம்மாதம் (ஆகத்து) 8ஆம் திகதி, மூக்கிலிருந்து இரத்தம் வடிந்த நிலையில், முகம் வீங்கி, கைகளிலும் காயத்துடன் பள்ளியிலிருந்து வீடு திரும்பியுள்ளான் விஸ்வகர்மா.
Credit: Wikipedia
மகனைக் கண்ட பெற்றோர் பதற, விஸ்வகர்மாவின் மாமாவான ஷிவ்குமார் என்ன நடந்தது என விசாரித்தபோது, தான் பள்ளிக்கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி அனுபம் பதக் என்ற ஆசிரியர் தன்னைக் கடுமையாகத் தாக்கியதாக விஸ்வகர்மா கூறியுள்ளான்.
உடனடியாக விஸ்வகர்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த புதன்கிழமை (17ஆம் திகதி) இரவு அவன் உயிரிழந்துவிட்டான்.
தற்போது அனுபம் பகத் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிசார் விஸ்வகர்மாவின் பிரேதப் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கிறார்கள்.
இதற்கிடையில், விஸ்வகர்மாவின் அண்ணனான ராஜேஷ், தான் தன் தம்பியின் பள்ளிக் கட்டணத்தை ஒன்லைனில் செலுத்திவிட்டதாகவும், ஆனால், அது தெரியாமல் ஆசிரியர் அவனைத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், விஸ்வகர்மாவின் பள்ளிக்கட்டணம் வெறும் 250 ரூபாய்தான்!