லண்டனில் பேருந்தில் இளம் பெண்ணுக்கு நடந்த மோசமான சம்பவம்! உதவி கோரும் பொலிசார்
லண்டனில் பேருந்தில்,சென்ற இளம் பெண் ஒருவரிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்ட நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
மேற்கு லண்டன் Northolt-ல் உள்ள White Hart ரவுண்டானாவிற்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்ததில் இளம் பெண் ஒருவர் நின்று கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் அவரிடம் பேசியுள்ளார்.
அப்போது இருவரும் அங்கு வந்த 282 எண் கொண்ட பேருந்தில் Ealing மருத்துவமனையை நோக்கி சென்றுள்ளனர். அப்போது அந்த பெண் இருந்த இடத்திற்கு சென்ற குறித்த நபர், அவரிடம் பாலியல் இயல்பு தொடர்பாக பேசியதுடன், பெண்ணை கண்ட இடங்களில் தொட்டுள்ளார்.
We're investigating the sexual assault of a teenage boy on a bus in #Ealing and we want to identify this man.
— Ealing Police (@ealingMPS) October 9, 2021
If you know who he is, please call 101, providing the reference 5822/13AUG or contact Crimestoppers.https://t.co/00q5Xf7uOH
இது குறித்து துப்பறியும் ஆய்வாளர் John Millward கூறுகையில், பாதிக்கப்பட்ட அந்த பெண் பயத்தில் உள்ளார். அதிர்ஷ்டவசமாக, அவருக்கு உடல்ரீதியான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை, ஆனால் அவர் மிகவும் அதிர்ச்சியில் உள்ளார்.
இப்போது, அந்த நபரை தேடும் பணி துவங்கப்பட்டுள்ளது. அவன் தொடர்பான சிசிடிவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளோம்.
யாரேனும் இந்த நபர் குறித்து அடையாளம் தெரிந்தால், உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கும் அடியும், இது விசாரணைக்கு முக்கிய தகவலை கொடுக்கலாம் என்று கூறியுள்ளார்.