பூச்சிகளை உண்ணும் தாவரம்... 150 ஆண்டுகளுக்கு முந்தைய அறிவியலாளரின் கூற்று நிரூபணம்
பிரபல அறிவியலாளரான சார்லஸ் டார்வினின் பூச்சி உண்ணும் தாவரம் குறித்த கூற்று ஒன்று தற்போது நிரூபணமாகியுள்ளது.
பிரபல அறிவியலாளரான சார்லஸ் டார்வின், 150 ஆண்டுகளுக்கு முன் ஒரு குறிப்பிட்ட தாவரம் குறித்து, அது பூச்சி உண்ணும் தாவரமாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். ஆனால், அவரால் அதை நிரூபிக்கமுடியவில்லை!
அறிவியலாளரின் கூற்று நிரூபணம்
1875ஆம் ஆண்டு, Saxifraga rotundifolia மற்றும் S. umbrosa என்னும் தாவரங்கள் பூச்சி உண்ணும் தாவரங்கள் என்று கூறியிருந்தார் டார்வின்.

இந்த Saxifraga வகை தாவரங்களில் மெல்லிய முடி போன்ற அமைப்புகள் காணப்படுவதுடன், அந்த தாவரங்கள் பசை போன்ற ஒரு திரவத்தையும் சுரக்கின்றன.
ஆகவே, அந்த தாவரம் பூச்சி உண்ணும் தாவரமாக இருக்கலாம் என்னும் கருத்தை முன்வைத்திருந்தார் டார்வின்.
விடயம் என்னவென்றால், ஒரு தாவரம் பூச்சி உண்ணும் தாவரம் என்னும் வரையறைக்குள் வரவேண்டுமானால், அந்தத் தாவரம் பூச்சிகளை கவர்ந்திழுத்து, பிடித்து வைத்து, உட்கொள்ளவேண்டும்.
ஆக, Saxifraga தாவரம் பூச்சி உண்ணும் தாவரமாக இருக்கலாம் என்று டார்வின் கூறினாலும், அவரால் அதை நிரூபிக்கமுடியவில்லை.

இந்நிலையில், 150 ஆண்டுகளுக்குப் பின், டார்வினின் கூற்று உண்மைதான் என்பதை ஆய்வாளர்கள் சிலர் நிரூபித்துள்ளார்கள்.
சீன தலைநகரான பீஜிங்கிலுள்ள Chinese Academy of Sciences என்னும் அமைப்பிலுள்ள Kunming Institute of Botany என்னும் நிறுவன ஆய்வாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்கள்.
அதாவது, ஒரு தாவரம் பூச்சி உண்ணும் தாவரம் என்னும் வரையறைக்குள் வரவேண்டுமானால், அந்தத் தாவரம் பூச்சிகளை கவர்ந்திழுத்து, பிடித்து வைத்து உட்கொள்ளவேண்டும்.
இந்த Saxifraga தாவரம், பூச்சிகளை கவர்ந்திழுப்பதை தற்போது ஆய்வாளர்கள் நிரூபித்துள்ளார்கள்.
அதாவது, Saxifraga தாவரம் ஒருவித வாசனையை வெளியிடுவதன் மூலம் பூச்சிகளைக் கவர்வது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, சிக்கிய பூச்சிகளை, phosphatase என்னும் என்சைம் மூலம் அந்த தாவரம் ஜீரணிப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த Saxifraga தாவரம் உயரமான மலைகளில், கடல் மட்டத்திலிருந்து 8,000 முதல் 18,000 அடி உயரத்தில் வளர்கிறது.

என்னதான் அந்த தாவரத்தால் ஒளிச்சேர்க்கை மூலம் தனக்கான உணவைத் தயாரித்துக்கொள்ளமுடியும் என்றாலும், அவ்வளவு உயரத்தில் அதற்கு நைட்ரேட்கள் கிடைக்காது.
அப்படியானால், நைட்ரேட்டுக்கு என்ன செய்வது? மண்ணில் நைட்ரேட் கிடைக்கவில்லை என்றால், நைட்ரேட்டுக்கு ஒரே வழி பூச்சிகள்தான். ஆக, நைட்ரேட் நிறைந்துள்ள பூச்சிகளை கவர்ந்து உட்கொண்டு, தனது நைட்ரேட் தேவையை பூர்த்தி செய்துகொள்கிறது Saxifraga தாவரம்.
அதையும், Isotope labeling என்னும் செயல்முறை மூலம் நிரூபித்துள்ளார்கள் அறிவியலாளர்கள்.
நைட்ரஜன் - 15 என்னும் நைட்ரஜன் ஐசோடோப்களை பூச்சிகளின் உடலுக்குள் செலுத்தி, பின் அந்த பூச்சிகளை தாவரங்களுக்கு உணவாக்கி, அதன்பின், அந்த தாவரங்களில் அந்த நைட்ரஜன் - 15 என்னும் நைட்ரஜன் ஐசோடோப்கள் உள்ளதை ஆய்வு மூலம் உறுதி செய்து, Saxifraga தாவரம் பூச்சி உண்ணும் தாவரம்தான் என்பதை நிரூபித்துள்ளார்கள் ஆய்வாளர்கள்!
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |