நடுக்கடலில் கப்பலை மடக்கிய அதிகாரிகள்: சிக்கிய பெரும் தொகை மதிப்பிலான போதைப்பொருள்
கரீபியன் கடலில் படகொன்றை மடக்கிய அதிகாரிகளுக்கு பெரும் தொகை மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியுள்ளது.
மூன்று நாடுகள் இணைந்து மேற்கொண்ட முயற்சி
ஐரோப்பாவுக்கு போதை கும்பல் ஒன்று பெருமளவில் போதைப்பொருட்களைக் கடத்துவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து கரீபியன் கடலில் சோதனை மேற்கொள்ள முடிவு செய்தன.
அவ்வகையில், கடந்த வாரம், பிரான்ஸ் கடற்படை மேற்கொண்ட சோதனை ஒன்றில், Martinique என்னும் தீவுக்கருகே ஒரு படகு சிக்கியது.
National Crime Agency/Forces armées aux Antilles
பெரும் தொகை மதிப்பிலான போதைப்பொருள்
அந்த படகில் 40 மூட்டைகளில் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் எடை 1.2 டன்கள் ஆகும்.
அதிகாரிகள் கொக்கைன் என்னும் அந்த போதைப்பொருளைக் கைப்பற்றிய நிலையில், அதன் மதிப்பு சுமார் 96 மில்லியன் பவுண்டுகள் என தெரியவந்துள்ளது.
National Crime Agency/Forces armées aux Antilles
மூன்று பேர் கைது
இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில் ஒருவர், ஸ்கொட்லாந்திலுள்ள Stornoway என்னுமிடத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
இந்த கைதைத் தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டில் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களில், 62 வயதான தந்தை மற்றும் 24 வயதான மகன் ஆகிய இருவர் Lincolnshireஐச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அவர்கள் தற்போது குடியிருப்பு அனுமதி பெற்று ஸ்பெயினில் வாழ்ந்துவருகிறார்கள்.
கைது செய்யப்பட்டுள்ளவர்களிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |