சியாட்டில் உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு 5 பேர் படுகாயம்
அமெரிக்காவின் சியாட்டில் நடைபெற்ற உணவு திருவிழாவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உணவுத் திருவிழாவில் துப்பாக்கிச்சூடு
சியாட்டில் நகரின் புகழ்பெற்ற சியாட்டில் சென்டரில் நடைபெற்ற பிரம்மாண்ட உணவுத் திருவிழாவில் திடீரென துப்பாக்கி சூடு சம்பவம் அரங்கேறியது.
ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 2 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒரு குழந்தை உட்பட 5 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.

தீயணைப்பு அதிகாரிகள் வழங்கிய தகவலின் படி, மாலை 18.00 மணி அளவில் இந்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
உணவு திருவிழாவில் கலந்து கொண்ட நபர்கள் வழங்கிய தகவலில், கொண்டாட்டத்தின் போது பலமுறை துப்பாக்கிச் சூடு சத்தங்கள் கேட்டதாகவும், இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. மேலும் மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி அலறி அடித்துக் கொண்டு ஓடியதாக தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் நிலைமையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தாக்குதல்தாரிகள் குறித்து விரைவில் தகவல் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |