ஆற்றில் 1000 பவுண்டு எடை கொண்ட வெடிகுண்டு இருப்பதை கண்ட மீனவர்! அடுத்தடுத்து நடந்த சம்பவம்
2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 1000 பவுண்டு எடை கொண்ட வெடிகுண்டு இத்தாலியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆற்றில் இருந்து தான் வெடிகுண்டானது கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டாம் உலகப் போர் முடிந்து 74 ஆண்டுகள் ஆகியும் இன்றும் அதன் தாக்கம் உணரப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளால் இன்றும் மக்களின் அன்றாட வாழ்வில் பாதிப்பு ஏற்படுகிறது.
இந்த நிலையில், இத்தாலியில் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பாக அகற்றப்பட்டது. இத்தாலியில் வரலாறு காணாத வறட்சி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள 'போ' ஆறு 70 ஆண்டுகளுக்கு பிறகு வறண்டுள்ளது.
இதனால் போர்கோ, வெர்ஜிலியோ பகுதியில் 2-ம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட 1000 பவுண்டு எடை கொண்ட வெடிகுண்டு ஆற்றில் இருப்பதை கடந்த மாதம் 25-ம் திகதி மீனவர் ஒருவர் கண்டுபிடித்தார்.
Reuters
இதனையடுத்து வெடிகுண்டை மீட்ட அந்நாட்டு இராணுவம் மெட்டோல் பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வெடிக்க வைத்து அகற்றினர்.
இது தொடர்பாக ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், போர்கோ பிராந்தியத்தில் வசிக்கும் சுமார் 3,000 பேர் இந்த பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு முன்னர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
கூடுதலாக, பகுதியின் வான்வெளி மூடப்பட்டது, மேலும் அருகிலுள்ள மாநில சாலை, ரயில் மற்றும் ஆற்றின் அந்தப் பகுதியின் போக்குவரத்தும் தடைசெய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Flavio Lo Scalzo/Reuters