ஈரானியப் படைகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமி., வெளியான ரகசிய ஆவணம்
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற இளம்பெண்ணை ஈரான் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 3 பேர் துஷ்பிரயோகம் செய்து கொன்றதாகக் கூறப்படுகிறது.
ஈரான் பாதுகாப்பு படையினரிடம் இருந்து கசிந்த ஆவணங்களில் உள்ள தகவல்களில் இந்த விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
2022-ஆம் ஆண்டில், ஈரானிய பாதுகாப்புப் படையினர் 16 வயதான நிகா ஷகராமியை (Nika Shakarami) கொன்றனர்.
அவர் 22 வயதான Mahsa Amini-யின் மரணம் தொடர்பாக ஈரானில் ஆட்சிக்கு எதிரான போராட்டங்களின் போது காணாமல் போனார்.
நிகா காணாமல் போன ஒன்பது நாட்களுக்குப் பிறகு பிணவறையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அது நிகா என்பதை அடையாளம் காண உறவினர்களுக்கு அதிகாரிகள் சில வினாடிகள் மட்டுமே அனுமதித்தனர்.
நிகாவின் தாயார் Nasrin உட்பட அவரது உறவினர்கள் நிகாவின் உடலில் அடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர்.
நிகா தற்கொலை செய்து கொண்டதாகவும், கட்டிடத்தின் மேலிருந்து விழுந்து இறந்தார் என்று அரசாங்கம் விளக்கியது. ஆனால் பொலிஸார் அவரை தலையில் அடித்து கொன்றதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அனால், ரகசிய ஆவணங்கள் வெளியானதும், நிகாவின் மரணத்துக்கான உண்மையான காரணம் வெளியே வந்தது.
சிறுமியைக் கொன்றவர்கள், உண்மையை மறைக்க முயன்ற மூத்த தளபதிகள் ஆகியோரின் பெயர்களும் அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Secret document Iran security forces, Iran protest, Iran Police, Iran Secret document