செத்து மடிந்த பிறகு தான் இந்துவாக தெரிகிறோமா? அண்ணாமலைக்கு சீமான் அதிரடி கேள்வி
செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
புலவர் கலியபெருமாள் 13வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்கள் சீமானிடம், தமிழகத்தில் நிலவும் நூல் விலை உயர்வு மற்றும் போராட்டங்கள் குறித்து முதல்வர் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் உங்களின் நிலைபாடு என்ன என்று கேள்வி கேட்டனர்.
நேரலை: 16-05-2022 தமிழ்த்தேசியப் பொதுவுடைமைப் போராளி! நமது ஐயா புலவர் கு.கலியபெருமாள் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி - தலைமை அலுவலகம் (சென்னை) https://t.co/hnktOwGp6x
— சீமான் (@SeemanOfficial) May 16, 2022
கனடாவில் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்வதை நிறுத்திய 16 வயது இளம்பெண்! பொலிசார் முக்கிய தகவல்
அதற்கு பதிலளித்த அவர், பின்னலாடை துறை மட்டுமன்றி, ஒவ்வொரு துறையாக பார்த்தால் அதன் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு போன்றவை தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இது தொடர்ந்து நடந்து வந்தால் கூடிய விரைவில் இலங்கை நிலை இந்தியாவிற்கும் ஏற்படும் என எச்சரித்தார்.
இவற்றை தொடர்ந்து `இந்து ஈழம் அமைப்போம்’ என்ற தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் கருத்திற்கு, செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா? இதுவரை முகாம்களில் உள்ள இந்துக்களுக்கு குடியுரிமை வழங்காதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.