மூத்த குடிமக்கள் அபராதம் செலுத்த நேரிடும்: தடுப்பூசி தொடர்பில் எச்சரித்த நாடு
நாட்டின் மூத்த குடிமக்கள் மேலும் தாமதிக்காமல் அனுமதிக்கப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்தி உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு கிரேக்கப் பிரதமர் இறுதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அடுத்த வாரத்தில் நாட்டின் தடுப்பூசி ஆணையை மீறியதற்காக மூத்த குடிமக்களுக்கு மாதாந்திர அபராதம் விதிக்கப்படும் என கிரேக்க அரசாங்கம் அறிவித்திருந்தது.
இந்த நிலையிலேயே மாதாந்திர தண்டனைகளுக்கு முன்னர் தடுப்பூசி போடுமாறு கிரேக்கப் பிரதமர் நாட்டின் மூத்த குடிமக்களுக்கு இறுதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், உங்கள் உயிரையும் நீங்கள் நேசிப்பவர்களின் உயிரையும் பாதுகாக்கவும், தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் உயிர்களைக் காப்பாற்றும் என்பதையும் புரிந்து கொள்ளுங்கள் என பிரதமர் Kyriakos Mitsotakis வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தடுப்பூசி போட மறுக்கும் 60 வயது கடந்த ஒவ்வொருவரிடமும் திங்கட்கிழமை முதல் 50 யூரோ அபராதமாக வசூலிக்க கிரேக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. மேலும், பிப்ரவரி மாதம் முதல் மாதாந்திர அபராதமாக 100 யூரோ வசூலிக்கப்படும்.
மூத்த குடிமக்களிடம் இருந்து வசூலிக்கும் அபராதம் மொத்தமும் நாட்டின் சுகாதாரத்துறைக்கு ச்செலவிடப்படும் என கிரேக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள், மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி போட முடியாதவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கிரேக்கத்தை பொறுத்தமட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட 90% மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர் அல்லது தடுப்பூசிக்காக பதிவு செய்துள்ளனர் என்றே தெரியவந்துள்ளது.