ஜேர்மன் மொழிப்பிரச்சினையால் துணையைப் பிரிந்து வாடும் ஆயிரக்கணக்கானோர்
ஜேர்மன் மொழிப்பிரச்சினையால், ஆயிரக்கணக்கானோர், கணவன் ஒரு நாட்டிலும், மனைவி வேறொரு நாட்டிலுமாக வாடி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கணவன் ஒரு நாட்டில், மனைவி வேறொரு நாட்டில்
கடந்த ஆண்டில், ஜேர்மனியில் வாழும் புகலிடக்கோரிக்கையாளர்களின் கணவன் அல்லது மனைவி தம் துணையுடன் இணைவதற்காக எடுத்துக்கொண்ட முயற்சிக்கு மொழி ஒரு பிரச்சினையாக இருந்துள்ளது.
அவ்வகையில், 13,607 பேர், தங்கள் கணவர் அல்லது மனைவியுடன் இணையமுடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
இப்படி தனது துணையுடன் இணையமுடியாதவகையில் தம்பதியரைப் பிரித்துவைக்கும் இந்த மொழிப்பிரச்சினை மிகவும் கொடுமையானது என்கிறார்கள் விமர்சகர்கள்.
2022இல் மட்டும் 13,607 பேர்
கடந்த ஆண்டில், ஜேர்மனியில் வெற்றிகரமாக புகலிடம் பெற்று வாழும் 13,607 பேரின் கணவர் அல்லது மனைவி, மொழித்தேர்வில் தோல்வியடைந்ததால், தங்கள் துணையுடன் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக ஜேர்மன் வெளியுறவு அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜேர்மனியில் வாழும் புகலிடம் பெற்றவர்களின் துணைவர்கள், தங்கள் கணவர் அல்லது மனைவியுடன் ஜேர்மனிக்கு வந்து சேர்ந்துவாழவேண்டுமானால், அவர்கள் மொழித்தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.