விளம்பரப் படத்துக்காக பாராசூட்டில் குதித்த அழகிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
விளம்பரப் படம் ஒன்றிற்காக பாராசூட் மூலம் குதித்த அழகிய இளம்பெண்ணொருவர், 50 மீற்றர் உய்ரத்திலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக பலியானார்.
விளம்பரப் படத்துக்காக...
செர்பியா நாட்டவரான டிஜானா (Tijana Radonjic, 19) என்னும் இளம்பெண், parasailing நிறுவனம் ஒன்றின் விளம்பரப்படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.
இந்த parasailing என்பது, படகு ஒன்றுடன் இணைக்கப்பட்ட பாராசூட்டில் இணைக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தபடி பயணிக்கும் ஒரு சாகச விளையாட்டு ஆகும்.
Montenegro நட்டிலுள்ள அந்த நிறுவனத்தின் விளம்பரத்துக்காக parasailing செய்ய ஒப்புக்கொண்ட டிஜானா, பாராசூட்டில் பயணித்துக்கொண்டிருந்த நிலையில், 50 மீற்றர் உயரத்திலிருந்து கடலில் விழுந்துள்ளார்.
மீட்புக்குழுக்கள் அவரை மீட்க விரைந்த நிலையில், கடலிலிருந்து அவரது உயிரற்ற உடலைத்தான் மீட்க முடிந்துள்ளது.
இதற்கிடையில், டிஜானா சுமார் 150 அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும்போது, பாராசூட்டுடன் தன்னை இணைத்திருந்த பெல்ட்டை கழற்றியதாகவும், என்னை இறக்கிவிடுங்கள் என சத்தமிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த துயர விபத்து குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், டிஜானாவின் மரணத்துக்கான காரணத்தை அறிவதற்காக அவரது உடலுக்கு உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |