பிரபல சீரியல் நடிகையை ஹோட்டலுக்கு அழைத்து சென்று உல்லாசம்! ரகசியமாக வீடியோ எடுத்து காதலன் செய்த செயல்

Marriage Serial Actress Cheat
By Balakumar Jan 06, 2021 12:27 PM GMT
Report

தமிழகத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி, இளம் பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்த நபர் வீடியோவை வைத்து மிரட்டி 10 லட்சம் ரூபாய் கேட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராதிகா (24). சினிமா நடிகையான இவர் தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட 11 திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை நடிகையாகவும் நடித்துள்ளார்.

தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வரும் இவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 28-ஆம் திகதி சென்னையில் இருக்கும் ஜெ.ஜெ.நகர் காவல்நிலையத்தில் தன்னை திருமணம் செய்வதாக கூறி ஒன்றாக இருந்து வீடியோ எடுத்து காதலன் ராஜேஷ் என்பவர் மிரட்டி வருவதாக கூறி புகார் அளித்திருந்தார்.

ஆனால், அந்த புகாரின் பேரின் பொலிசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், ராதிகா, நீதிமன்றத்தில் பொலிசார் வழக்கு பதிவு செய்யக்கோரி வழக்கு தொடர்ந்தார்.

இதையடுத்து நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சென்னை, திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிசார் நடிகை அளித்த புகாரின்படி, விசாரணை நடத்தினர்.

அதில் நடிகை அளித்த புகார் அனைத்தும் உண்மை என தெரியவந்தது. அதைதொடர்ந்து ராஜேஷ் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் பொலிசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

இதை அறிந்த ராஜேஷ் உடனடியாக தலைமறைவாகிவிட பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக சின்னத்திரையில் நடித்து வருகிறார்.

ராதிகாவின் தோழியின் மூலம் சென்னை கீழ்க்கட்டளையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் அறிமுகமானார்.

சின்னத்திரை நடிகை என்பதால் ராஜேஷ் அவர் சூட்டிங் எடுக்கும் பகுதிக்கு சென்று தொடர்ந்து பேசி வந்துள்ளார்.  

இந்த நட்பு பிறகு காதலாக மாறியது. ராதிகா சின்னத்திரையில் பிரபலமானவர் என்பதால் அவரை திருமணம் செய்து கொள்ள ராஜேஷ் வலியுறுத்தியுள்ளார். அதற்கு முதலில் ராதிகா மறுத்துள்ளார். பின்னர் ராஜேஷ் நடிகையின் பெற்றோரிடம் பேசி திருமணத்திற்கு சம்மதம் வாங்கியுள்ளார்.

இதையடுத்து இரு வீட்டார் முன்னிலையில் கடந்த 2019 டிசம்பர் மாதம் 1-ஆம் திகதி வெகு விமர்சையாக இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. பிறகு இவர்களின் திருமணம் கடந்த 2020 பிப்ரவரி 26-ஆம் திகதி வடபழனி முருகன் கோவிலில் நடத்த முடிவு செய்து அதற்காக திருமண அழைப்பிதழும் அடித்துள்ளனர்.

ராஜேஷ் தான் வருங்கால கணவர் என்பதால் அவருடன் ராதிகா அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளார்.

அப்போது ராஜேஷ் ஈவன்ட் மேனேஜிமென்ட் என்ற பெயரில் நட்சத்திர விடுதி ஒன்றில் நிகழ்ச்சி நடத்துவதாகவும், அந்த நிகழ்ச்சியை ராதிகா தான் தொடங்கி வைக்க வேண்டும் என்று கூறி அழைத்துள்ளார்.

வருங்கால கணவர் என்பதால் ஆடம்பரமான உடையை அணிந்து கொண்டு நடிகை ராதிகா நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார். அங்கு சென்றதும் ராஜேஷ் நிகழ்ச்சி திடீரென ரத்து ஆகிவிட்டது என்று கூறி ஒரு அறைக்கு ராதிகாவை அழைத்து சென்றுள்ளார்.

அதன் பின்,வந்ததும் வந்தாய் நாம் தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறோமே இருவரும் ஒன்றாக இருக்கலாம் இங்கு யாரும் வரமாட்டார்கள் என்று ராஜேஷ் ஆசைவார்த்தை கூறியுள்ளார். கணவராக வரப்போகும் நபர் தானே என்று, நடிகை ராதிகாவும் தனிமையில் இருக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.

அப்போது ராஜேஷ் நடிகை ராதிகாவுடன் நெருக்கமாக இருந்துள்ளார். இருவரும் ஒன்றாக இருக்கும் வீடியோவை நடிகை ராதிகாவுக்கு தெரியாமல் ஹோட்டல் அறையில் கேமரா வைத்து வீடியோவாக ராஜேஷ் எடுத்து வைத்துக்கொண்டார். பின்னர் நடிகையை வீட்டில் விட்டுவிட்டு ராஜேஷ் தனது வீட்டிற்கு சென்றுவிட்டார்.

பிறகு நடிகை தனது வருங்கால கணவர் என்ற முறையில் ராஜேசுக்கு போன் செய்து பேச முயற்சி செய்துள்ளார். ஆனால் நடிகையின் செல்போன் அழைப்பை ராஜேஷ் எடுக்க வில்லை. அத்துடன் நடிகையிடம் பேசுவதையும் அவர் தவிர்த்து வந்துள்ளார்.

ஒரு நாள் நேரில் சென்று ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய் என்று நடிகை கேட்டுள்ளார். அதற்கு அவர், உன்னுடன் உல்லாசமாக இருக்கத்தான். என்னுடைய வேலை முடிந்து விட்டது. இனி உன்னிடம் எனக்கு வேலை இல்லை என்று கூறியுள்ளார்.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த நடிகை, ராஜேஷிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ராஜேஷ் நாம் இருவரும் ஒன்றாக இருந்த ஆபாச வீடியோவை காட்டி என்னை தொந்தரவு செய்தால், ஆபாச இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி அந்த வீடியோவை கொடுக்க வேண்டும் என்றால், 10 லட்சம் ரூபாய் பணம் கொடு என்று மிரட்டியுள்ளார். பணம் கொடுக்க மறுத்தால், உன் சினிமா வாழ்க்கையை நான் அழித்துவிடுவேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார்.

அதன்படி நடிகை ராதிகா தனது வீட்டிற்கு தெரியாமல் 2.50 லட்சத்தை ராஜேஷிடம் கொடுத்துள்ளார். மீதி பணத்தை தந்துவிடுகிறேன். எனக்கு அந்த வீடியோவை தந்துவிடு என்று கேட்டுள்ளார்.

முழு பணம் தந்தால்தான் நான் வீடியோ தருவேன் என்று ராஜேஷ் மிரட்டியுள்ளார். உடனே நடிகை இதுகுறித்து பொலிசில் புகார் அளிப்பேன் என்று கூறியுள்ளார். அதற்கு ராஜேஷ் இதுபோன்ற தவறு ஏதேனும் செய்தால் உன் மீது ஆசிட் அடித்து வாழ்க்கையை சீரழித்துவிடுவேன் என்றும், லாரியை வைத்து ஏற்றி கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

GalleryGallery
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US