ஆசியாவில் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை படுகொலை செய்த நபர் லண்டனில்
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து தொடர் படுகொலையில் ஈடுபட்ட நபர் லண்டன் தெரு வீதியில் நடந்து சென்றதை பலர் பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவுக்கு வருகை தருபவர்
ஆசியாவில் குறிப்பிட்ட சில நாடுகளில் குறைந்தது 20 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை அவர் கொன்றிருக்கலாம் என்றே கூறப்படுகிறது. தற்போது 79 வயதான சார்லஸ் சோபராஜ் அடிக்கடி பிரித்தானியாவுக்கு வருகை தருபவர் என்றே கூறுகின்றனர்.
செய்தி ஊடகம் ஒன்று 2022ல் நேபாளத்தில் நடந்த சார்லஸ் சோபராஜின் சிறை உடைப்பு சம்பவம் குறித்து அடுத்த வாரம் விசாரணை நிகழ்ச்சி ஒன்றை முன்னெடுக்க உள்ளது.
சுமார் 20 ஆண்டுகள் சிறையில் இருந்த சார்லஸ் சோபராஜ், இந்தியா, தாய்லாந்து மற்றும் நேபாளத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை குறி வைத்ததாக கூறப்படுகிறது.
சார்லஸ் சோபராஜ் தொடர்பில் ஆவணப்படங்கள் பல வெளியாகியுள்ளன. அதில், பொலிசாரிடம் சிக்காமல் இருக்க என்ன செய்தார் என்பது குறித்தும் விளக்கியுள்ளார். பாங்காக் நகரில் 21 வயதேயான அமெரிக்க சுற்றுலாப் பயணி தெரசா என்பவரை கொலை செய்தது குறித்து டெல்லி சிறையில் இருந்த போது விளக்கமளித்திருந்தார்.
மட்டுமின்றி, துருக்கிய சுற்றுலாப் பயணி ஒருவரை தாய்லாந்தின் பட்டாயா நகரில் கொலை செய்து, நெருப்பு வைத்ததையும் சார்லஸ் சோபராஜ் வெளிப்படுத்தியிருந்தார்.
நேபாள உச்ச நீதிமன்றம்
தாய்லாந்தில் சுமார் 5 கொலைகள் வரையில் சார்லஸ் சோபராஜ் முன்னெடுத்துள்ளார். ஆனால் விசாரணை எதையும் அவர் எதிர்கொண்டதில்லை. நெதர்லாந்து சுற்றுலாப் பயணிகளான இளம் தம்பதி ஒன்றை விஷம் அளித்து, அவர்களை காப்பாற்றுவதாக கூறி, போதை மருந்து அளித்து, பின்னர் அவர்கள் உடல்களை நெருப்பு வைத்துள்ளார்.
தற்போது வரையில், மறுத்தும் வருகிறார். 2022 டிசம்பர் மாதம் சோபராஜின் வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை விடுதலை செய்து நேபாள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
பிரான்ஸ் சுற்றுலாப் பயணிக்கு விஷம் கொடுத்த குற்றச்சாட்டில் 20 ஆண்டுகள் இந்தியாவில் சிறை தண்டனை அனுபவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.