காபூலில் தொடரும் பயங்கரம்! முக்கிய பகுதியை உலுக்கிய தாக்குதல்.. பீதியில் உறைந்த மக்கள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சரமாரி ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக Aamaj News தெரிவித்துள்ளது.
காபூலின் வடமேற்கில் உள்ள Khair Khāna மாவட்டத்தில் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
காபூலில் உள்ள மின் நிலையம் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதாக Aamaj News தெரிவித்துள்ளது.
அதேசமயம், ராக்கெட்டுகள் Chamtalah துணை மின் நிலையத்தை தாக்கியிருக்கலாம் என அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், இதுவரை இந்த ராக்கெட் தாக்குதலில் எந்தவித உயிரிழப்பும் பதிவாகவில்லை, ஆனால், கட்டிடங்கள் சேதமைடைந்ததால் அப்பகுதி மக்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர் என கூறப்படுகிறது.
ராக்கெட் தாக்குதலில் வீடுகள் சேதமடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
جزییات فرودآمدن چندین فیر راکت بر کابل:
— Aamaj News (@AamajN) September 16, 2021
منابع به آماج نیوز میگویند که چندین فیر راکت در ساحه سرکوتل خیرخانه، مربوط به ناحیه هفدهم شهر کابل فرودآمده، تاکنون از تلفات انسانی این رویداد چیزی گفته نشده، اما خسارات مالی برای باشندگان این منطقه بجا مانده است.#آماج_نیوز https://t.co/ZdRb4chjC6 pic.twitter.com/MXZqRMjS4M
இந்த சரமாரி ராக்கெட் தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பியோடியதை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் காபூல் உட்பட நாட்டின் பல்வேறு மாகாணங்களை தலிபான்கள் கைப்பற்றினார்.
தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நாள் முதல் ஆப்கானிஸ்தானில் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
அதேசமயம், சமீபத்தில் காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதல்களுக்கு ஐ.எஸ் அமைப்பின் ஆப்கான் கிளை பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.