3 மாதங்களுக்கு பின் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கம் - காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜப்பானின் தென்மேற்கு பகுதியில் கடுமையா நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாரிய நிலநடுக்கம்
ஜப்பானின் மேற்கே கியூஷூ மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் நேற்று இரவு 11.14 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.3ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் குறைந்தது 8 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் பொருட் சேதம் மற்றும் சுனாமி எச்சரிக்கை குறித்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
மேலும் யுவாஜிமாவிற்கு மேற்கே சுமார் 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை சுமார் 25 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |