மெக்சிகோவில் கடுமையான நிலநடுக்கம்! ரிக்டரில் 5.0 ஆக பதிவு
மெக்சிகோ நாட்டின் ஹக்சிட்லா நகருக்கு 3 கி.மீ. மேற்கே இன்று அதிகாலை 2.25 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டரில் 5.0 ஆக பதிவாகி உள்ளது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது..
இருப்பினும் குறித்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.
அதுமட்டுமின்றி கடந்த 2 நாட்களுக்கு முன்பும் மெக்சிகோவில் உள்ள ரிசோ டி ஓரோ நகரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் வடகிழக்கு பகுதியில் 217.4 கி.மீ. ஆழத்தில் ரிக்டரில் 5.4 கடுமையான நிலநடுக்கம் பதிவாகி இருந்தது என அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.