பிளே ஆப் போட்டியில் இந்த வீரர் விளையாடாமாட்டார்? கொல்கத்தாவுக்கு மிகப் பெரும் அடி
கொல்கத்தா அணியின் முக்கிய வீரர் ஒருவர் பிளே ஆப் போட்டியில் விளையாடாமாட்டார் என்பது உறுதியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில், லீக் போட்டிகள் முடிந்து பிளே ஆப் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் முதல் குவாலிபயர் போட்டியில், இன்று சென்னை மற்றும் டெல்லி அணிகள் விளையாடி வருகின்றனர்.
இதையடுத்து நாளை கொல்கத்தா அணி பெங்களூருவுடன் எலிமினேட்டர் போட்டியில் மோதுகிறது. இப்போட்டியில் கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஷகிப் அல் ஹசன் விளையாடாமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஏனெனில், ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலக கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் துவங்கவுள்ளதால், ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற வங்கதேச வீரர்கள் அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட அந்நாட்டு வீரர்களுக்கு நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தற்போது அவர் கொல்கத்தா அணியில் இருந்து விலகி ஓமன் நாட்டிற்கு செல்லவுள்ளார்.
இது கொல்கத்தா அணிக்கு மிகப் பெரிய அடி என்றே கூறலாம். ஏனெனில் இவர் வந்த பின்பு தான் கொல்கத்தா அணியின் பவுலிங் மற்றும் பேட்டிங் பலம் கூடியிருந்தது குறிப்பிடத்தக்கது.