பாகிஸ்தானிடம் தோல்வி எதிரொலி.! கடும் வசைபாடுதலை சந்திக்கும் இந்திய வீரருக்காக களமிறங்கிய முன்னாள் வீரர்!
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்ததை தொடர்ந்து சமூகவலைதளங்களில் கடும் வசைபாடுதலை சந்திக்கும் ஷமிக்கு ஆதரவாக முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் களமிறங்கியுள்ளார்.
நேற்று துபாயில் நடந்த உலகக் கோப்பை ‘சூப்பர் 12’ போட்டியில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாபசர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வரலாற்று சாதனை படைத்தது.
பாகிஸ்தான் உடனான தோல்வியை தொடர்ந்து இணையத்தில் மதவாத அடிப்படையில் இந்திய பந்துவீச்சாளர் முகமது ஷமி கடும் வசைபாடும் வார்த்தைகளை சந்திக்க நேரிட்டது.
‘இந்திய அணியில் ஒரு பாகிஸ்தானி’, ‘நீ பாகிஸ்தானுக்கு சென்று விடு’ உள்ளிட்ட மிக மோசமான வார்த்தைகளால் ஷமிக்கு எதிராக சமூக வலைதளங்களில் சிலர் வன்மத்தை கக்கினார்.
இந்நிலையில் ஷமிக்கு ஆதவாக இந்திய முன்னாள் வீரர் இர்பான் பதான் குரல் கொடுத்துள்ளார்.
இர்பான் பதான் ட்விட்டரில் பதிவிட்டதாவது, ஆடுகளத்தில் இந்தியா-பாகிஸ்தான் விளையாடிய போட்டிகளில் நான் அங்கமாக இருந்த ஆட்டத்தில் நாங்கள் தோற்றோம்.
ஆனால் பாகிஸ்தானுக்கு செல்லமாறு ஒருபோதும் கூறப்படவில்லை. நான் சில வருடங்களுக்கு முன் இருந்த இந்தியாவை பற்றி பேசுகிறேன்.
Even I was part of #IndvsPak battles on the field where we have lost but never been told to go to Pakistan! I’m talking about 🇮🇳 of few years back. THIS CRAP NEEDS TO STOP. #Shami
— Irfan Pathan (@IrfanPathan) October 25, 2021
இந்த முட்டாள்தனம் (பாகிஸ்தானுக்கு செல் உள்ளிட்ட வசைபாடுதல்) நிறுத்தப்பட வேண்டும் என இர்பான் பதான் ஷமிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.