டோனியின் அறைக்கு சென்று அவரது பேட்டை நான் எடுத்த போது அவர் சொன்ன வார்த்தை! ரகசியம் உடைத்த இந்திய அணி இளம் வீரர்
இந்திய கிரிக்கெட் அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் ஷர்துல் தாக்கூர் தனது பேட்டிங் முன்னேற்றத்துக்காக டோனி கொடுத்த ஐடியா குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
சமீபத்தில் நடந்த இங்கிலாந்துடனான ஓவல் டெஸ்டில் ஷர்துல் தாக்கூர் அடித்த 2 அரைசதங்கள்தான் இந்திய அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றது. தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் தாக்கூர் அளித்த பேட்டியில், நான் மீண்டும் இந்திய அணிக்குள் வந்த போது த்ரோ ஸ்பெஷலிஸ்ட் ரகு மற்றும் நுவானுடன் பயிற்சி மேற்கொண்டேன்.
அவர்கள் அதிவேகமாக வீசக்கூடியவர்கள். இதோடு விராட் கோலி, ரோகித் சர்மா எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்தனர். பேட்டிங் செய்யும் போது பேட்ஸ்மென் போல் சிந்திக்க வேண்டும் என்றனர்.
ஒருமுறை டோனியின் அறையில் அவரது பேட்டை எடுத்து நிழல் பேட்டிங் செய்தேன். அப்போது அவர் என் கிரிப்பைப் பார்த்து கொஞ்சம் மேலாக மட்டையை பிடிக்கிறாய் இன்னும் கொஞ்சம் கீழே பிடி அப்போதுதான் ஷாட்டைக் கட்டுப்படுத்த முடியும் என்றார்.
அதுதான் எனக்கு முக்கியமான டிப்ஸ்.
நான் பேட்டிங் ஆட முடியும் என்பதில் எனக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. எங்கு ஸ்கோர் செய்ய முடியும் என்ற ஸ்பாட்டை சரியாக பிடிக்க வேண்டும் என்பதே முக்கியம் என கூறியுள்ளார்.