இப்படி தான் விளையாடனும்.. இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு பாடம் எடுத்த ஷர்தூல் தாகூர்!
இங்கிலாந்து அணிக்கெதிரான போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த ஷர்தூல் தாகூர், அது எப்படி சாத்தியமானது என்பது குறித்து கூறியுள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் மூன்று போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்த நிலையில் நான்காவது போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, இங்கிலாந்தின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல், அடுத்ததடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் 8வது இடத்தில் களமிறங்கிய ஷர்தூல் தாகூர் அரை சதம் அடித்து இங்கிலாந்து அணிக்கே ஷாக் கொடுத்தார். அதன் பின் 36 பந்தில் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஷர்தூல் தாகூர் அதிரடிக்கு முன் இந்திய 150 ரன்னாவது அடிக்குமா என்று இருந்தது. ஆனால் அவர் அதிரடிக்கு பின் இந்தியா 191 என்ற ஒரு கெளரவமான ஓட்டத்தை எடுத்தது.
இதனால், இவரை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் ஷர்தூல் தாகூர் செய்தியாளர்களிடம் எப்படி ரன்களை குவிக்க வேண்டும் என்பதை குறித்து பேட்டி கொடுத்துள்ளார்.
அதாவது, இங்கிலாந்து மண்ணில் பந்து தாறுமாறாக தான் பறக்கும். இதனால் நாம் எச்சரிக்கையாக விளையாட வேண்டும். அந்த சமயத்தில் நீங்கள் cross shot ஆடாமல் ஸ்ட்ரைட் பேட் போட்டால் மட்டுமே அதிக ரன்களை எடுக்க முடியும் என்று சில டிப்ஸ்களை வழங்கினார்.
இந்த போட்டியில் கோலியை தொடர்ந்து ஷர்தூல் தாகூர் அரை சதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.