ஆற்றில் கைவிட்ட மீனவருக்கு காத்திருந்த அதிர்ச்சி: தண்ணீருக்குள் கவ்வி இழுத்த சுறா: வீடியோ
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மீனவரை படகில் இருந்து புல் சுறா ஒன்று கவ்வி தண்ணீருக்குள் இழுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மீனவரை தண்ணீருக்குள் இழுத்த சுறா
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள எவர்கிளேட்ஸ் தேசிய பூங்கா வழியாக பாயும் மிசிசிபி ஆற்றில் பொதுவாகவே முதலைகள், தண்ணீர் பாம்புகள் போன்றவை காணப்படும்.
அந்த வகையில் உப்பு தண்ணீரிலும், நன்னீரிலும் வாழக்கூடிய புல் சுறாக்களும் இந்த பகுதியில் உள்ள மிசிசிபி ஆற்றில் அதிகமாக காணப்படுகின்றன.
Shark attack in Florida everglades pic.twitter.com/5illndFvlg
— OnlyBangers.eth (@OnlyBangersEth) June 24, 2023
இந்நிலையில் அப்பகுதியில் மீனவர் ஒருவர் மீன் பிடிப்பதற்காக தூண்டிலை வீசிவிட்டு கையை கழுவுவதற்காக தண்ணீரில் கையை நனைத்துள்ளார்.
அப்போது திடீரென சுறா மீன் ஒன்று அவரது கையை கவ்வி பிடித்து தண்ணீருக்குள் இழுத்தது.
மீனவரை காப்பாற்றிய சக மீனவர்கள்
இதையடுத்து நிலைமையை உடனடியாக உணர்ந்து கொண்ட சக வீரர்கள் ஆற்றில் குதித்து படுகாயமடைந்த மீனவரை பத்திரமாக மீட்டனர்.
மேலும் அவர் உடனடியாக ஹெலிகாப்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |