இந்திய அணி சொதப்பலுக்கு இதுவே காரணம்! தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர் பொல்லாக்
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலுக்கு என்ன காரணம் என்று, முன்னாள் வீரர் ஷேன் பொல்லாக் கூறியுள்ளார்.
இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. இதில் முதல் இன்னிங்ஸ் ஆடிய இந்திய அணி, யாருமே எதிர்பார்க்காத வகையில் 202 ஓட்டங்களுக்குள் ஆல் அவுட் ஆனது.
அதிகபட்சமாக ராகுல் 50 ஓட்டங்களும், அஸ்வின் 46 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்நிலையில், இந்திய அணியின் பேட்டிங் குறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஷேன் பொல்லாக் கூறுகையில், முதல் போட்டிக்கும், இந்த போட்டிக்கும் இந்திய அணியின் பேட்டிங்கை பார்க்கும் போது, சொதப்பலாகவே உள்ளது.
இந்த இரண்டாவது போட்டியில் அனைத்துமே கேட்சுகள் தான், அதற்கு முக்கிய காரணம் வெளியே சென்ற பந்தை எல்லாம் இந்திய வீரர்கள் அடித்து ஆட நினைத்தது தான் என்று கூறியுள்ளார்.