பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவு!
பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீஃப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் மொத்தம் உள்ள 342 எம்.பி.க்களில் 174 பேரின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது.
பாகிஸ்தான் வரலாற்றில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து பதவி பறிக்கப்பட்ட முதல் பிரதமர் என்ற மோசமான சாதனைக்கு இம்ரான்கான் சொந்தக்காரர் ஆனார்.
அதனைத் தொடர்ந்து, நாடாளுமன்ற செயலகத்தில் நேற்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஷெபாஸ் ஷெரீஃப் மனுதாக்கல் செய்திருந்த நிலையில், பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரதமராக தெரிவாகியுள்ளார்.
இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் சகோதரர் ஆவார்.