வங்கதேச முன்னாள் பிரதமருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை: டாக்கா நீதிமன்றம் உத்தரவு
ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச முன்னாள் பிரதமருக்கு சிறைத் தண்டனை
அரசு வீட்டு வசதி திட்டத்தில் நிலம் ஒதுக்கியது தொடர்பாக நடந்த முறைகேடு வழக்கில் டாக்கா சிறப்பு நீதிமன்றம் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

வங்கதேச ஊழல் தடுப்பு ஆணையம், அரசு வீட்டு வசதி திட்டத்தில் கீழ் 7,200 சதுர அடி கொண்ட 2 வீட்டு மனைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்து இருப்பதாக வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அவரது மருமகன் ரத்வான் முஜிப் சித்திக், மருமகள்கள் துலிப் ரிஸ்வானா சித்திக், அஸ்மினா சித்திக் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த டாக்கா சிறப்பு நீதிமன்றம் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா எதிரான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கியது.
நீதிபதி ரபியுல் ஆலம் வழங்கிய தீர்ப்பின் படி, வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இரண்டு நிலங்கள் சம்பந்தப்பட்ட இரண்டு தனித்தனி வழக்குகளிலும் தலா 5 ஆண்டுகள் என 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் குற்றம் சாட்டப்பட்ட மருமகன் ரத்வான் முஜிப் சித்திக், மருமகள்கள் துலிப் ரிஸ்வானா சித்திக், அஸ்மினா சித்திக் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மற்றொரு சரணடைந்த குற்றவாளி முகமது குர்ஷித் ஆலமுக்கு தலா 1 ஆண்டு என 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குற்றவாளிகள் அனைவருக்கும் தலா 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது வசித்து வரும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, நீதிமன்ற விசாரணையின் போது தலைமறைவாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |