பாலஸ்தீன் மக்களுக்கு மனிதாபிமான உதவி... ரூ.113 கோடியை அறிவித்த ஐக்கிய அரபு அமீரகம்
இஸ்ரேல் - ஹமாஸ் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவியாக 50 மில்லியன் திர்ஹாம் தொகையை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவர் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அறிவித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் மாகாண ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அலுவலகம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் இந்த நிதியுதவியை முன்னெடுப்பதாகவும், சுமார் 113 கோடி ரூபாய் மதிப்பிலான உதவிகள் முன்னெடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நெருக்கடி காலங்களில் உலகெங்கிலும் பாதிக்கப்படக்கூடிய மக்கள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு அவசர நிவாரணம் மற்றும் உதவிகளை வழங்குவதற்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் கொள்கையின் ஒரு பகுதியாக இந்த உதவி அளிக்கப்படுகிறது.
@afp
காஸாவின் 2.3 மில்லியன் மக்கள்
இஸ்ரேல் மீதான ஹமாஸ் படைகளின் தாக்குதலுக்கு பின்னர், 7வது நாளாக காஸா மீது கொடூர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல். இதுவரை இரு தரப்பிலுமாக 2,800 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், காஸாவின் 2.3 மில்லியன் மக்களுக்கு எகிப்தில் இருந்து பொருள் உதவிகள் வருவதை இஸ்ரேல் தடுத்ததை அடுத்து, சர்வதேச உதவி குழுக்கள் மோசமான மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக எச்சரித்துள்ளன.
@afp
மேலும், நெருக்கடியை எதிர்கொள்ளும் காஸா மக்கள் நாளுக்கு ஒரு வேளை மட்டுமே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |