ஆப்கானிஸ்தான் மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தற்கொலை குண்டு தாக்குதல்.. 32 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் சிறுபான்மை ஷியா முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமாக Kandahar-ல் உள்ள Imam Bargah மசூதியிலே இந்த கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மசூதியில் நூற்றுக்கணக்கானோர் வெள்ளிக்கிழமை தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முதற்கட்ட தகவலின் படி, அந்நேரத்தில் மசூதிக்குள் இருந்த தற்கொலை தாக்குதல்தாரி வெடிகுண்டை வெடிக்கச் செய்து தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் 32 பேர் கொல்லப்பட்டதாகவும், 55-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.
காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பலரின் நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
ஐ.எஸ்(கே) பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்தில் ஷியா பிரிவினருக்கு எதிராக நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். கடந்த வெள்ளிக்கிழமை, Kunduz-ல் உள்ள ஷியா மசூதியை குறிவைத்து இதுபோன்ற தாக்குதல் நடத்தப்பட்டது.
அக்டோபர் 8ம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான Kunduz-ல் உள்ள ஷியா மசூதியில் தொழுகையில் போது நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 143 பேர் காயமடைந்தனர்.
Kunduz மசூதி தாக்குதலுக்கு ஐஎஸ்(கே) பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது நினைவுக் கூரத்தக்கது.