தானியங்களைக் கொள்ளையிட்டுத் தப்ப முயன்ற வெளிநாட்டு சரக்குக் கப்பல்: துணிந்து செயல்பட்ட உக்ரைன்
ரஷ்யா ஏற்றுமதி செய்த உக்ரைனுக்கு சொந்தமான தானியங்களுடன் வெளியேற முயன்ற வெளிநாட்டு சரக்குக் கப்பல் ஒன்றை அதிரடியாகக் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
சட்டவிரோதமாக ஏற்றுமதி
ரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட கிரிமியன் தீபகற்பத்தில் இருந்து உக்ரேனிய தானியங்களை அந்த கப்பல் சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்ததாக கூறப்படுகிறது. தொடர்புடைய கப்பலின் மாலுமியையும் உக்ரைன் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

2022 தொடக்கத்தில் இருந்தே உக்ரைனுக்கு சொந்தமான வேளாண் நிலங்களை ரஷ்யா சட்டவிரோதமாக கைப்பற்றி வந்துள்ளது. மட்டுமின்றி, அப்பகுதியில் விவசாயம் செய்வதுடன், தானியங்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது.
தற்போது தெற்கு ஒடேசா பகுதியில் வைத்து அப்படியான கப்பல் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, ஏற்கனவே ஒருமுறை கிரிமியா பகுதியில் இருந்து அந்த கப்பல் தானியங்களுடன் வெளியேறியுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
Usko Mfu என்ற அந்த கப்பல் மற்றும் அதன் மாலுமிகள் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவதற்கான விதிகளை மீறியதாக குற்றஞ்சாட்டியுள்ளனர். மேலும், அஜர்பைஜான் நாட்டவர் என அடையாளம் காணப்பட்ட அந்த மாலுமி மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமனால் 5 ஆண்டுகள் வரையில் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இரண்டாவது முறையாக மே மாதம்
தொடர்புடைய சரக்குக் கப்பல் கைப்பற்றப்படும் போது 12 வெளிநாட்டு ஊழியர்களும் அந்த கப்பலில் இருந்துள்ளனர். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

நவம்பர் 2023ல் குறித்த கப்பலானது 3,000 டன்களுக்கும் அதிகமான தானியங்களுடன் வெளியேறியிருந்தது. தற்போது இரண்டாவது முறையாக மே மாதம் அதே கப்பல் கிரிமியா பகுதியில் காணப்பட்டுள்ளது.
உக்ரைனின் கிரிமியா பகுதியை 2014ல் வலுக்கட்டாயமாக ரஷ்யா கைப்பறியிருந்தது. அப்போது மேற்கத்திய நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தாலும், இதுவரை இந்த விவகாரத்தில் முறையான தீர்வு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |