ஓமான் வளைகுடாவில் பரபரப்பு! துபாய் நிறுவனத்திற்கு சொந்தமான டேங்கர் கப்பலை கடத்திய ஆயுதமேந்திய மர்ம நபர்கள்: பிரித்தானியா முக்கிய தகவல்
ஓமான் வனைகுடாவில் வைத்து ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் பனாமா கொடியுள்ள கப்பலை கடத்தியதாக Lloyds List Maritime Intelligence உறுதிப்படுத்தியுள்ளது.
MV Asphalt Princess டேங்கர் கப்பலை கடத்திய மர்ம நபர்கள், அதை ஈரானுக்கு பயணம் செய்ய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தக் கப்பலை யார் கடத்தினார்கள் என்பது தொளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஈரான் படைகளை சந்தேகிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த குற்றச்சாட்டை நிராகரித்த ஈரான், இது தங்கள் நாட்டிற்கு எதிரான விரோத நடவடிக்கைக்கான போலி காரணம் என தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தி அருகே MV Asphalt Princess டேங்கர் கப்பல் சென்ற போது, 9 ஆயுதமேந்திய நபர்கள் அதில் ஏறிய கடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
MV Asphalt Princess துபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்திற்கு சொந்தமானது, இந்நிறுவனத்திற்கு சொந்தமான கப்பல்களில் ஒன்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஈரான் படைகளால் கடத்தப்பட்டது நினைவுக்கூரத்தக்கது.
இந்நிலையில், கடத்தல்காரர்கள் MV Asphalt Princess டேங்கர் கப்பலை விட்டுச் சென்றுவிட்டதாகவும், தற்போது கப்பல் பாதுகாப்பாக இருப்பதாக பிரித்தானியா கடற்படை தகவல் தெரிவித்துள்ளது.